Showing posts with label Thala Ajith. Show all posts
Showing posts with label Thala Ajith. Show all posts

Thursday, January 31, 2013

அரசியல் வேறு சினிமா வேறு. அரசியலையும் சினிமாவும் கலக்காதீர்




மேற்கண்ட‌ காட்சியை தமிழ் சினிமா பார்க்கும் யாராலும் மறந்திருக்க‌ முடியாது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த சம்பவம் என்றும் காலத்தால் அழியாத ஒன்று.

ஒரு பாராட்டு விழாவில், அரசியலும் சினிமாவும் வேறு, இரண்டையும் ஒன்றாக கலக்காதீர் என்று அனைவரது முன்னிலையிலும் எடுத்துரைத்தார்.
அதன் பின் அவர் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல.

அப்போது தனக்கும் இதற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பது போல் ந‌டந்து கொண்ட கமலுக்கு தற்போது தன்னை சுற்றி நிகழும் அனைத்து நிகழ்வுகளும் மேற்கண்ட சம்பவத்தை கண்டிப்பாக நினைவுகூற வழிவகுத்திருக்கும்.
பல் வலியும் வயிறு வலியும் அவரவருக்கு வந்தால் தான் புலப்படும் என்று அன்றே நம் முன்னோர்கள் எழுதி வைத்தது மிகச் சரியே.

அது போகட்டும், தேனி, மதுரை இன்னும் பிற‌ மாவட்டங்களில் ரஜினி ரசிகர்களோடு சேர்ந்து அஜித் ரசிகர்களும் கமலுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதை கேள்வியுரும் போது மிக சந்தோஷமாக உள்ளது, பெருமையாக இருக்கிறது.

ஒரு படத்தை எடுத்து அதனை வெளியிடுவதென்பது, ஒரு தாய் பத்து மாதம் தன் குழந்தையை ஈன்று, பெற்றெடுப்பதற்கு சமம் என்ற வடிவேலுவின் வசனம் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. உண்மை.

தமிழக அரசு, தன் அரசியல் 'லீலைகளை' உடனே நிறுத்தி, இந்த முற்றுகைக்கு கூடிய விரைவில் ஒரு முற்றுபுள்ளி வைத்து, விஸ்வரூபம் அனைத்து திரையரங்கிளும் வெற்றிரூபமாக நடை போட கடவுளை பிரார்த்திகிறேன்.

Tuesday, May 1, 2012

Billa 2 - The Don Is Back...

Teaser Sets Record

Billa 2 teaser has made a huge impact all over Internet and it has taken youtube by a storm. This is a record on it's own as far as any South Indian movies are concerned. Not only for Ajith fans but the teaser without a doubt has raised curiosity as well as expectations among general public. The overall response is just sensational and this has made Blla 2 the most awaited film of the year.


The teaser which was released on 13th April at 7pm to be specific was indeed a special Thamil New Year gift to Ajith fans around the globe. The viewership counts have been growing and growing ever since it gets uploaded in youtube by producer, Mr.Sunir Kheterpal.

In the first few minutes, youtube view counts got stuck at 305, thanks to Ajithfans all over who thronged to the site to get a glimpse of our Thala. In the first 24 hours, the viewership crossed 3 lakhs with more than 4500 likes. There was no stopping there, it grew to 5 lakhs with more than 6000 likes in just 2 days. Third day witnessed a 7 lakhs hits with more than 7700 likes. After the so-called technical glitch for more than a day, the hit counts continued to grow and crossed 9 lakhs with 9000 likes in just 7 days. A phenomenal 1 million mark was achieved the very next day and the view counts are still growing. As of now, it has crossed 1.3 million hits with more than 9500 likes and this is by far a milestone for any Thamil movies teasers in near future.

At the same time, the teaser occupied the first slot of 'Top Trending Indian Video' for the first few days pushing Amir Khan's 'Satyamev Jayate' theme song to second. This is again another achievement which will be preserved in a very long time.


The Teaser - Technical Aspects


Speaking of the teaser, it is slick, stylish and uber-cool. Aided by the crisp editing, as it progresses, the increasing heartbeat in the background further adds soul to the fast-paced teaser. There is no denying that it's filled with mass elements but there is surely 'class' written all over it.
Be it the presentation, camerawork or lighting, the hard work of the entire team is crystal clear. Explosions seems real and interestingly, Billa 2 is the first ever Indian movie (at Asian level too) which had been shot using RED Epic. With it's pure magic, the camera brings the teaser to a different level and it's going to be a whole new experience for audience watching Billa 2 on big screen.



Not to forget, the stunts are going to be major highlight. Thanks to all the stunt coordinators involved who brought out the realistic and exciting daredevil stunt sequences throughout. The climax fight which had been shot on a chopper will be the highlight of Billa 2. For this, Thala has performed death defying stunt and it required Thala to hang out of the helicopter without any dupe. No joke, the sequence was shot at an altitude of over 1000 ft (10,000 feet from ground) and at a temperature about minus 5 degrees. The teaser did give a glimpse of this shot and watching the whole episode on big screen will easily leave the audience on goosebumps. Sure, this fight sequence is mouth-watering but taking the risk factors into considerations, these kind of  dangerous acts should be avoided. Generally, Ajith fans are expressing their concerns over this and they would not want Thala to attempt these kind of stunts ever at the expense of his own life. Hopefully, Thala will heed to fans' requests and avoid these kind of daredevil stunts in future.


Thala All The Way

Billa means Ajith, Ajith means Billa. The voice modulation and dialogue delivery when Thala utters the above mentioned dialogue is just a small evident that supports the fact that Thala has taken extra care to essay the role to perfection. Looks like Thala is all set to blaze the screen with his acting, style and sheer screen presence. Watch out for Thala to unveil a meaner and merciless performance in the form of Billa.


The tagline "Every Man Has A Past... Every Don, A History" is pretty much apt since this version of Billa will be talking about the journey of a common man who transforms himself to a powerful and dreaded don. Billa... David Billa... This has become a brand ala James Bond. Let's pray for Billa 2 to give a new dimension in Thala's career. Wishing Thala Ajith and the whole Billa 2 team a great success and may this movie sets a new benchmark for future Thamil movies on how a action-packed movie should be. benchmark/milestone.

Music and Background Score

Just like the earlier venture, music plays a major role in here too. The teaser starts off with the earlier Billa's theme in a slow and sad tone which emotes the pain Billa goes through at initial stages of his life. The teaser carries a score rich with grandness but thrilling as well as haunting feel could be felt towards the end. Background score and re-recording are another aspects to look out for. With Yuvan's midas touch all over, musical treat is guaranteed.

Fans' Reaction


Most importantly, it looks like a complete package for Ajithfans. Ajithfans are awestruck and satisfied by the teaser and the way the whole movie progressed from scratch. They are going gaga over teaser, which is visible via their remarks and comments on social networks. Thala's dialogue 'Dei, en vaazhkaila ovvoru naalum, ovvoru nimishamum, een ovvoru nodiyum naana sedukunadhu da' has been so viral on Ajith fans Facebook walls and twitter pages. The reach and reception is just unbelievable and this indicates the kind of huge fan base following our Thala.

Happy 12th Anniversary - April 24th


Herewith, on behalf of all Ajithians, I wish our Thala Ajith and Mrs.Ajith a Happy Anniversary. Life without love is a book without its words. May you and your beloved live like a complete story. :)


Happy 41st Birthday  - May 1st


Many more happy returns of the day Thala. May God showers you with more and more success and lots of happiness. :)
Sir, you have been a great role model to me throughout my life. From you, I have indirectly learnt and still learning how to live my life on my own terms with the 'Live and Let Live' principal.
Thank you for that and I'm really really proud to be your die hard fan. Thala Pola Varuma...

♥ உடல் மண்ணுக்கு உயிர் தல அஜித்திற்கு 

Tuesday, January 10, 2012

2011 - 'தல' அஜித்தின் ஆண்டு

2011 ஆம் ஆண்டு நம்ம தல அஜித்திற்கு தன் சினிமா பயணத்தில் கண்டிப்பாக ஒரு சிறந்த ஆண்டே. (தன் சக கால நடிகர்களைக் காட்டிலும்) தமிழ் சினிமாவில் ஒரு நடிகனாக தன் முத்திரையை மேலும் ஒரு படி அழுத்தம் திருத்தமாக பதித்திருக்கிறார். இவ்வாண்டு அஜித்திற்கும் சரி அவரது கோடான கோடி ரசிகர்களுக்கும் சரி, ஒரு மறக்கமுடியாத ஆண்டாக இருக்கும என்றே சொல்ல வேண்டும். ஏன் அப்படி என்ற உங்கள் கேள்விக்கு பதில்கள் இதோ...

1) மங்காத்தாவின் அசூர 'ஓபனிங்'

இதுவரை தமிழ் சினிமா கண்டிராத ஓபனிங்கை மங்காத்தா பெற்றது அனைவரும் அறிந்ததே. திரும்பிய தியேட்ட‌ர்களில் எல்லாம் மங்காத்தாதான். சில தியேட்டர்களில் அறிவிக்கப்படவேயில்லை. அவ்வளவு ஏன், இன்னும் சில தியேட்டர்களில் போஸ்டர்கள் கூட ஓட்டாமல் மங்காத்தா திரையிடப்பட்டது. கேஸினோ போன்ற தியேட்டர்களில் அறிவிக்கப்படாமலே மூன்று நாட்கள் திரையரங்கு நிறைந்த காட்சிகள். பல மல்ட்டி ப்ளெகஸில் யுவன் யுவதி படக்காட்சியை ரத்து செய்துவிட்டு மங்காத்தாவை ஓட்டினார்கள். தமிழ் மட்டுமல்ல, தெலுங்கு மலயாள தேசத்திலும் கூட பெரிய ஓபனிங் பெற்றதை, கண்டிப்பாக தயாரிப்பாளர் முதற்கொண்டு யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏற்கனவே, 'கிங் ஆப் ஓபனிங்' அஜித் அவர்களின் படங்கள் பெரிய ஓபனிங்கை பெரும் என்பதை அனைவரும் அறிவீர். இதற்கு மேலும் வளு சேர்க்க, முன்னோட்டம் ('டிரைலர்') ரசிகர்கள் மட்டுமல்லாது பொது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உண்டு பண்ணியது. இவ்வேளையில், எடிட்டர் பிரவின் மற்றும் ஷ்ரிகாந்த் அவர்களுக்கு தங்களது அசத்தலான டிரைலருக்காக‌ நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். ரசிகர் மன்றங்களைக் கலைத்துவிட்டார், இனி எப்படி இவருக்கு ஓபனிங் கிடைக்கும் என்று வாய் சவடால் பேசிய 'சிலர்' வாயை ஒரேடியாக அடைத்தார். இதை பிற‌ நடிகர்களும் சரி அவர்களது ரசிகர்களும் சரி, நிச்சயமாக எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ரசிகர் மன்றங்களை வைத்தே பெரிய ஓபனிங் பெற‌லாம், படத்தை வெற்றி பெற செய்திடலாம் என்ற தமிழ் சினிமாவில் எழுதப் படாத கூற்றை தவறென்று நிரூபித்தார். உண்மையைச் சொல்லப் போனால், 'கிங் ஆப் ஓபனிங்' மங்காத்தாவின் மூலம் 'எம்பெரர் ஆப் ஓபனிங்' ஆனார்.

2) மங்காத்தாவின் வெற்றி

இப்படத்திற்கு எத்திசையிலும் வெற்றி முழக்கம், பட்டி தொட்டியெல்லாம் பட்டயைக் கிளப்பியது. தமிழ் நாடு மட்டுமல்லாது மலேசியா, சிங்கை, துபாய், இன்னும் திரையிட்ட இடத்திலெல்லாம் அமோக வரவேற்பு. தல அஜித்தின் 'சால்ட் அன்ட் பெப்பர் லுக்' பரவலாக பேசப்பட்டது. கடைசிவரை பணத்தின் மேல் கொண்ட வெறி, உடல் மொழி, 'நெகடிவ்' கதாபாத்திரம், நடனம், 'ச்க்ரீன் பிரசன்ஸ்' என ஓவ்வொரு விஷயமும் வெகுஜன மக்களுக்கு பிடித்துப்போனது. ரசிகர்ககளைப் பற்றி சொல்லவே வேண்டாம். சால்ட் அன்ட் பெப்பர் லுக்கோடு கல்லூரி விழா மற்றும் பொது நிகழ்சிகளில் வளம் வந்து மங்காத்தா பாடல்களுக்கு ஆடிப் பாடினர். மங்காத்தா இவ்வாண்டில் வெளிவந்த அனைத்து படங்களையும் வசூலில் முறியடித்து புதியதோர் சாத‌னை ப‌டைத்துவிட்ட‌து. சென்னயில் மட்டும் இதனது வசூல் கிட்டதட்ட‌ 9 கோடியைத் தொட்டுள்ளது. தயாரிப்பாளர், தியேட்டர் உரிமையாளர் முதல் சைக்கிள் 'டோக்கன்' விற்பவன் வரை அனைவரும் பணம்(லாபம்) பார்த்தனர். வெங்கட் பிரபுவிற்கும் அவரது ஒட்டுமொத்த பட குழுவினருக்கும் மனமார்ந்த ந‌ன்றிகள் கலந்த பாராட்டுகள். படத்தை வெளியிட்ட சன் நிறுவனம் மங்காத்தா மொத்தத்தில் 130 கோடிகள் வரை வசூலித்திருப்பதாக அன்மையில் தகவல் வெளியிட்டுள்ளது. இது உண்மை எனும் பட்சத்தில், முதலீடை விட இந்த தொகை மூன்று மடங்காகும். அதன் இணைப்பை கீழே காண்க.



அன்மையில் மக்களை கவரும் படங்கள் இல்லாத காரணத்தினாலும், சில பல பெரிய நடிகர்களின் படங்கள் மண்ணைக் கௌவியதனாலும், மங்காத்தா சென்ற வாரத்திலிருந்து மீண்டும் திரையிடப்பட்டுள்ளது. தீபாவ‌ளிக்கு வெளியான‌ ப‌ட‌ங்களை ஓரங்கட்டிவிட்டு திரையரங்கு உரிமையாளர்கள் மங்காத்தாவை மேண்டும் ரிலீஸ் செய்துள்ளனர். இது பொங்கல் வரை நீடிக்கும். இதற்கு ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.



3) கூகில் தேடலில் (படங்கள் பிரிவு) மங்காத்தா

சமீபத்தில் கூகிளில், படங்கள் பிரிவில் 2011 ஆம் ஆண்டில் மிக விமரிசியான அல்லது அதிக அளவில் தேடப்பட்ட படங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இது இந்திய அளவில் எடுக்கப்பட்ட 'டாப் டென்' பட்டியல் என்பது குறிப்பிடத்தக்கது. 'பாடிகார்ட்', 'ரா‍‍ ஒன்', 'டெல்லி பெள்ளி' என இந்தி படங்கள் ஆக்கிரமித்திருக்கும் இப்பட்டியலில், தமிழ் சினிமாவிலிருந்து மங்காத்தா மட்டுமே இடம் பெற்றிருக்கிறது. இதில் மங்காத்தாவிற்கு 7 ஆவது இடம். தல அஜித்திற்கும் மங்காத்தா படகுழுவினருக்கும் மீண்டும் ஒரு சபாஷ். முழு பட்டியல் விவரமும் இதனது சன் தொலைக்காட்சி கானொலி இணைப்பும் கீழே.





4) 2010 இல் மக்களைக் கவர்ந்த 50 ஆண்களில் அஜித்

இந்திய அளவில், மக்களுக்கு பிடித்துப்போன‌ 50 ஆண்களில் அஜித் இடம் பெற்றுள்ளார். அழகு, கவர்ச்சி, வசீகரம், பிரசித்தி, சிறப்பு, சாதனை, வெற்றி சத‌விகிதம் போன்ற பல்வேறு கூறுகளை கருத்தில் கொண்டு இணயத்தின்வழி வாக்களிப்பு நடத்தப்பட்டது. 31 டிசம்பர் மாதம் 2010 வரை நீடித்த இந்த வாக்களிப்பில் ரசிகர்களும் பொது மக்களும் தங்களைக் கவர்ந்தவர்களுக்கு வாக்களித்தனர். நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இயக்குணர்கள் அடங்கிய அந்த 50 ஆண்களில் தமிழ் சினிமா பிரபலங்களை விரல் விட்டு என்னலாம். அஜித் 18 ஆவ‌து இட‌த்தைப் பிடித்தார். என்னைப் பொருத்தவரை இது கண்டிப்பாக ஒரு சாதனை தான். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். போட்டியின் முழு விவரம் அறிய இங்கே செல்லவும். வாக்குகளின் வழி தெரிவு செய்யப்பட்ட அந்த 50 ஆண்கள் பட்டியலை கீழே காணலாம்.





5) இணையத்தில் அஜித்தின் ஆக்கிரமிப்பு

இணையதள ஆய்வாளரான சிரில் அலெக்ஸ் என்பவர் சமீபத்தில் நீயா நானா எனும் நிகழ்ச்சியில், கூகிலில் அஜித் அதிகம் தேடப்படுபவர் என்றுள்ளார். இக்கூற்று 2011ஆம் ஆண்டு மட்டுமல்லாது, பொதுவாக‌ கூறப்பட்டதென்பதோ உண்மை தான். இருப்பினும், 2011ஆம் ஆண்டும் நிச்சயம் இதில் அடங்கும் பட்சத்தில் இதனை தாராளமாக சென்ற வருட சாதனைகளில் சேர்க்கலாம். அதன் கானொலி இதோ.



ஆக, 2011-ஆம் ஆண்டு கண்டிப்பாக அஜித் அவர்களுக்கு ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்துவிட்டது. அதேசமயத்தில், அவரது ரசிகர்களுக்கு 2011 ஒரு மறக்க முடியாத ஆண்டாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

2011 ஆண்டில் நம் தல அஜித் அவர்களுக்கு 40 வயது பூர்த்தியாகிவிட்டது. வாழ்த்த வயதில்லை, அவர் தொழிலிலும் வாழ்விலும் மென்மேலும் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

பி.கு இது முழுக்க முழுக்க கமல்‍‍-ரஜினி இருவரையும் சேர்க்காமல் எழுதியது.

Friday, August 26, 2011

Thala's Mankatha - Music Review



Vilaiyaadu Mankatha
Singers: Yuvan Shankar Raja, Ranjith, Sucharitha, Anita, Premgi Amaren
Lyrics: Gangai Amaran, Sucharitha (Hindi), Yuvan Shankar Raja (English)

The purpose to release this track as solo is to give an overall idea about this prestigious project. It did, to a certain extent. I got to admit, this failed to impress me at first listen. Multiple listens did create an 'oomph' factor.
With the help of various instruments as well as combinations of voices, this is indeed the pick of the album, for me. It just grew in me and I have been humming the tune eversince. One thing is for sure, this track will set the local pubs on fire once the movie has released. Good job indeed.


Nee Naan
Singers: SP Charan, Bhavatharani
Lyrics: Niranjan Bharathi

This certainly belongs to melody genre. I heard this song brings together SP Charan and Bhavatharani combo for the first time, pretty interesting combo that is. I liked both the renditions and the track is soothing to ears. No doubt, it will be a hit among couples.


Vaada Bin Laada
Singers: Krish, Suchitra
Lyrics: Vaali

Impressing general listeners with this track is a tough task I would say. One needs some musical knowledge to get hooked to this. Most of the times, the music
is loud which makes the lyrics go unnoticed. Perhaps, visuals/song picturisation may do some wonders in getting music lovers' attention towards this track. However, there is a section of people (from general listeners) who is going gaga over this track. This is certainly not my kind of song.


Machi Open the Bottle
Singers: Haricharan, Mano, Naveen, Premji, Tippu
Lyrics: Vaali

Without a single doubt, this track is targetted for mass audience. It's a mixed of kuthu number and folk genre. One can't deny the fact that it resembles 'Saroja Saaman Nikalo' from Chennai 600028. After watching Premji's recent interview in Indiaglitz, it seems it's a deliberate attempt. He clearly told that they wanted to re-create the same 'magic' of Saroja Saaman Nikalo with this track. A beaten to death tune I would say. Having said that, fans will lap it up by turning the theatre halls into dance floors.


Vilaiyaadu Mankatha


Nanbane
Singers: Madhushree, Yuvan Shankar Raja
Lyrics: Vaali

A slow poison indeed. I don't think this track can be categorised under melody genre. It gives pathos kind of feel by appealing to the listeners' emotions. Basically, the lyrics suggest that a woman doesn't really into the good or evil of a man she fell in love with. Must be a situational song and I strongly feel Madhushree could have put in some extra efforts in bringing the tenderness/sorrow the situation might require. I could be wrong as Yuvan should know better. Anyway, not to forget Yuvan's rendition in this song. Usually, he sings alone and him sharing space with others especially with a female singer makes this track quite special for Yuvan fans. His voice adds and contributes extra value to this number.


Balle Lakka
Singers: Karthik, Vijay Yesudas, Anusha Dhayanidhi
Lyrics: Gangai Amaran

Now, this is something that I fell in love in my first hearing itself. Very catchy and it is neither slow paced nor fast paced. My gut feelings say that this number will be popular among teenegers, thanks to the catchy lyrics and simple yet interesting usage of instruments. This song marks the debut of a singer, Anusha Dayanidhi, wife of Durai Dayanidhi, the producer of Mangkatha. She crooned this song very well, quite a gifted voice and I'm pretty sure she will go places after this.


Vilayadu Mankatha (Extended Dance Mix)
Singers: Anitha, Premgi Amaren, Ranjith, Suchitra, Yuvan Shankar Raja
Lyrics: Gangai Amaran, Sucharitha (Hindi), Yuvan Shankar Raja (English)

This is the remix version of the title track. It's fast paced and has jazzy touch. The usage of the music bits from this track in latter part of the trailer was very apt. Liked it. Again, this track can be another possible candidate in night clubs, pubs or functions like wedding and birthdays.


Mankatha Theme Music - Instrumental

Whenever Yuvan involves in my Thala's film, theme music is the first I would look out for. As expected, Yuvan didn't dissapoint. This is his area of expertise. Once again, he proves why he's is the best in the current crop of MDs when it comes to theme music cums background scores throughout the movie. The flavours of Vilaiyaadu Mankatha can be felt here and there. It has all the potentials to be Ajithfans' and/or Yuvan fans' pick as their ringtones. In short, it's outstanding, magestic and thrilling. Loved it to the core.


It's crystal clear that Yuvan has balanced himself in satisfying quite a number of sections of people like Ajithfans mostly, followed by his own fans and then the general audiences. He has experimented and tried his best. The album is already a phenomenal Hit, therefore I would like to take this opportunity to congratulate Yuvan and the entire crew who involved in making the album a great success. Congratulations!!! :)



In comparison with Billa

Since, Dheena remains the evergreen album when it comes to Ajith-Yuvan combo, I would rather not touch it. Personally, I enjoyed Billa songs, I mean every song in the album. But, I can't do the same for Mangkatha. I'm yet to 'gel' with a few songs like 'Vaada Bin Laada', 'Machi Open the Bottle' and 'Nanbane'. Maybe I need more listens and I might change my opinion, who knows.

Billa Theme VS Mangkatha Theme

Since it's Yuvan, I can't resist in comparing both the albums' theme musics. Billa's theme was mainly aimed for Ajithfans where it carries the 'gethu' feel throughout. Mass all the way.
Mangkatha theme music on the other hand can be enjoyed by everyone and anyone. It's more to a situational theme that discourses the storyline the director has crafted. It's kind of thrilling and thanks to the grand ochestrations.
So who is the winner? Eventhough I love both the tracks, the former slighyly wins by a hair.


In Comparison With Earlier Ventures

For Yuvan - Venkat Prabhu Combo

Chennai 600028 > Goa > Mangkatha = Saroja

For Yuvan - Ajith Combo

Dheena > Billa > Mangkatha > Aegan

My Rating - 2.5/5

Mangkatha - Strictly For AjithFans & YuvanFans

Thursday, November 18, 2010

மங்காத்தா - பில்லா 2

'தல' படம் வரவில்லை, இருப்பினும் இந்த வருட தீபாவளி அஜித் ரசிகர்களுக்கு தல தீபாவளியாக அமைந்து விட்டது. இரண்டு சரவெடி செய்திகள் விகிதம் அனைத்து அஜித் ரசிகர்களுக்கும் இரட்டிப்பு கொண்டாட்டம்.

முதலில் சரவெடி :-

ஏகப்பட்ட பில்-டப்புகளுக்கு இடையே, மங்காத்தா பட ஸ்டில்கள்/போஸ்டர்கள் சில வெளியாக்கப்பட்டன. 'ஈஸ்ட்மெண்ட்' வண்ணம், பிண்ணனியில் தேர்வு செய்யப்பட்ட கட்டிடங்கள், தலைப்பை எழுதிய விதம், ஐம்பதாவது முத்திரை என எல்லாம் நன்றாகத் தான் உள்ளது. இருப்பினும், அவ்வளவாக எனக்கு திருப்தியாக இல்லை. அஜித் சற்று மெலிந்து இருப்பது ஒரே ஆறுதல். மற்றபடி, நரைத்த முடியுடனும் களைப்புற்ற முகத்துடனும் அஜித் தோற்றமளிப்பது மிகவும் வருத்ததை அளிக்கின்றது. George Cloony-ஆக வந்து போக நாம் ஒன்றும் Hollywood-இல் இல்லையே. அங்கே அது ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால், இங்கே இது போன்ற விசயங்களை ஏற்க நம் மக்களுக்கு இன்னும் முதிர்ச்சி வரவில்லை என்றே சொல்லலாம். ரசிகர்களை விட்டு விடுவோம், தல எப்படி வந்தாலும் கைத்தட்டுவார்கள், விசில் அடிப்பார்கள். எனது கவலை எல்லாம் பொது மக்களே. நமது மக்களை ஈர்க்க தோற்றம் ஒரு முக்கிய பங்கை ஆற்றுகிறது என்று அஜித் சீக்கிரம் உணருதல் அவசியம். 'வாலி' அஜித்தை மீண்டும் திரையில் காண்பிப்பேன் என்று வெங்கட் பிரபு சொன்னதாக ஞாபகம். இதற்கு தான் இப்படி ஒரு பில்-டப் செய்தீர்களா என்று வெங்கட் பிரபுவை கேட்க தோன்றுகிறது. இதோ:


இரண்டாம் சரவெடி :-

பில்லா இரண்டாம் பாகத்தின் அதிகாரப் பூர்வமான அறிவிப்பு வெளியானது. இதைத் துளியும் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ரசிகர்கள் இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கப் பட்டனர். மங்காத்தா படபிடிப்பு முடிந்தவுடனே, ஏப்ரலில் பில்லா இரண்டு துவங்குமாம். இதனை அமரர் திரு பாலாஜி அவர்களிண் மகனும் இன்னுமொறு நிறுவனமும் இணைந்து தயாரிக்கப் போகின்றனர். பில்லா முதல் பாகத்தில் பணியாற்றிய நான்கு ஜம்பவான்களான இயக்குணர் விஷ்னுவர்தன், இசையமைப்பாளார் யுவன், எடிட்டர் ஷிரீகர் பிரசாட் மற்றும் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா இதிலும் இடம்பெருவர். இது முதல் பாகத்தின் தழுவல் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, முதல் பாகத்திலிருந்து பின்னோக்கி கதை செல்லும். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்பு சொல்வாரே, "அவன் எப்படி ஒரு டோன் ஆனான், எப்படி பில்லாவானாங்ரது தான் கதை. தல அஜித் தான் இதுக்கு பொருத்தமா இருப்பார்", அது போல. பில்லா இரண்டு வெற்றி படம் என்று இப்போதே எழுதி வைத்துக் கொள்ளலாம். வெங்கட் பிரபு இது நாள் வரை முகநூள், துவிட்டர் மற்றும் இதற இணைய தளங்களில் மெனக்கெட்டு மங்காத்தாவிற்கு கூட்டிய எதிர்பார்ப்பை விஷ்னுவர்தன் ஒரே அறிவிப்பில் செய்து விட்டார். இதோ:



ஐம்பதாவது படமென்பதால், மங்காத்தாவிற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடயே மட்டுமல்லாது பொது மக்களிடமும் இருக்கும். பில்லா முதல் பாகம் எந்த அளவிற்கு வெற்றி பெற்றது என்பது நாடறிந்ததே. அதனால், இந்த இரண்டாம் பாகத்திற்கும் பலத்த எதிர்பார்ப்பு நிச்சயம் இருக்கும். இதையெல்லாம் பார்க்கும் போது, தல விழித்துக் கொண்டார் என்றே சொல்லத் தோன்றுகிறது. சரியான பாதையில் பயணிக்கிறார் என்பேன். தோற்றத்தில் மட்டும் சற்று கூடுதல் கவனம் செலுத்தினால் என்னைப் போன்ற ரசிகர்களுக்கு அளவில்லா இன்பம் தான்.

பி.கு மங்காத்தாவிற்கு பிறகு, 'கிரீடம்' விஜய்யின் படத்தை ஆவலாக எதிர்பார்த்தேன். அது ஒரு 'பீரியட்' படம். ஆக்ஷ்சன் (மங்காத்தா) படத்திற்கு பிறகு 'கிரீடம்' விஜய்யின் படம், அதற்கடுத்து பில்லா இரண்டு (மற்றுமொறு ஆக்ஷ்சன் படம்) என்றிருந்தால், ஒரு 'variety' இருந்திருக்கும்.

தங்களது கருத்து என்னுடன் வேறுபட்டால், பின்னூட்டத்தில் பிகிர்ந்து கொள்ளலாம்.

Friday, October 8, 2010

'தல'யின் புதிய தயாரிப்பாளர் அவதாரம்

வழக்கம் போல மீண்டும் ஒரு அஜித் பதிவு. என்ன செய்வது, எனக்கு வேறு யாரையும் தெரியாதே. சரி விசயத்திற்கு வருவோம்.


நடிகராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்துவைத்து, பின்னர் அசல் படத்தில் துணை இயக்குணராகவும் பணி புரிந்தார். அடுத்த கட்டமாக, 'தல' தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். இதனை 'ஸ்டாரஜித்' (Starajith) இணையதளமே உறுதி செய்தாகிவிட்டது. 'குட் வில்ஸ் என்டர்டைய்ன்மென்ட்' (Good Will Entertainment) என்று தன் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெயரும் சூட்டிவிட்டார். தயாரிப்பு பொறுப்புகள் அனைத்தும் மனைவி தான் பார்த்துக் கோள்ள போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இனி தன் சொந்த படபிடிப்பு போக, தான் தயாரிக்கும் படங்கள் படபிடிப்பிலும் மிகவும் 'பிசி' ஆகிவிடுவார்.

இது நல்லதா அல்லது கெட்டதா என்று சொல்லத் தெரியவில்லை. இவரின் இந்த முடிவை நல்லபடியான கண்ணோட்டத்திலே எடுத்துக் கொள்கிறேன். என்ன தான் இருந்தாலும் 'உடல் மண்ணுக்கு உயிர் தல அஜித்திற்கு' என்று வாழ்பவன் நான். இந்த முடிவிற்கும் எனது முழு ஆதரவு கண்டிப்பாக இருக்கும்.

நிறைய புதிய இயக்குணர்களிடமும் அறிமுக இயக்குணர்களிடமும் கதைகள் கேட்டு வருகிறார் போலும். தயாரிப்பாளர் அஜித் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். என்னைப் பொருத்தவரை வளர்ந்து வரும் புதிய இயக்குணர்களுடன் பணி புரியலாம். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் 'ஸ்கிரிப்டும்' கையுமாக கோடம்பாக்கத்தில் தயாரிப்பாளர்களுக்காக தவம் கிடப்பது நாம் அறிந்ததே. பலருக்கு பல விதமாக வெளியில் தெரியாதவாறு உதவிகள் செய்த, செய்யும், செய்யப் போகும் அஜித் அவர்கள் இனி தன் நிறுவனத்தின் மூலம் இவர்களைப் போன்ற சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு உதவ முன் வரலாம். மேலும், நாளைய இயக்குணர் நிகழ்ச்சி மூலம் வெளிச்சத்திற்கு வரும், இனி வரப் போகும் துடிப்பான இளைஞர்களுக்கும் தாராளமாக வாய்ப்பு வழங்கலாம்.

மேலும் மிஸ்கின், பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், சமுத்திரகனி, பாண்டிராஜ் போன்றோருடன் அவ்வப்போது படங்கள் பண்ணுவது சிறப்பு. இவர்களது கதைக்களம், சுவாரசியமான திரைக்கதைகள் அமைப்பு மற்றும் இயக்கம், மக்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. இவர்கள் குறைந்த 'பட்ஜெட்டில்' ரசிக்கும்படியான படங்கள் எடுப்பதோடு, இவர்களது படைப்புகளும் விருதுகள் பெறும் தகுதிகள் உடையவை என்று சொன்னால் அது மிகையில்லை.
ஆக மொத்தத்தில், நல்ல படங்கள் பண்ணால் சந்தோஷம். இந்த நிறுவனம் சிறப்பான படங்கள் தர எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திகின்றேன்.


இது ஒரு நல்ல ஊக்கப்பூர்வமான மற்றும் ஆரோக்கியமான விசயம், கண்டிப்பாக பண்ணலாம் என்றாலும் சரி, இவருக்கு எதற்கு இந்த வீணற்ற வேலை என்றாலும் சரி, நண்பர்களே, அஜித் தயாரிப்பாளராக உருவெடுப்பதைப் பற்றி உங்கள் கருத்துக்களைப் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Thursday, September 30, 2010

மங்காத்தா - என்ன தான் நடக்குது?

வழக்கம் போல, இணைய‌ தளங்கள் மங்காத்தாவைப் பற்றிய பல்வேறு செய்திகளைப் பரப்பி வருகின்றன. ஒரு வழியாக படப்பிடிப்பு வரும் அக்டோபர் இருபதாம் தேதியிலிருந்து ஆரம்பம் என்று படத்தின் இயக்குணர் வெங்கட் பிரபு அறிவித்துவிட்டார். அடுத்த‌ வ‌ருட‌ம் 'ச‌ம்மர்' ரிலீசாம், குறிப்பாக‌ மே ஒன்றாம் தேதியில் ப‌ட‌ம் வெளிவ‌ரும் என்று இய‌க்குண‌ர் உறுதிமொழி அளித்துள்ளார். சொன்ன‌ தேதியில் வ‌ருகின்ற‌தா என்று பார்ப்போம்.
இதுவரை நமக்கு தெரிந்த தகவல்களின் ப‌டி, வெங்க‌ட் த‌ன‌து ஆஸ்தான‌ 'டெக்னிக‌ல் டீமையே' இதிலும் ப‌யன்படுத்துகிறார். இசைக்கு யுவ‌ன், ஒளிப்பதிவுக்கு ச‌க்தி ச‌ர‌வ‌ண‌ன் என்று தன‌து முந்தய படங்களான‌ சென்னை 28, ச‌ரோஜா, கோவா போன்ற‌வற்றில் ப‌ணிபுரிந்த‌வ‌ர்க‌ள் தான் இதிலும். சந்தோசம் தான்.


இவ்வளவு 'டெக்னிகள்' விசயங்கள் தெரிந்தும், படத்தின் துணை நடிகர்கள் யார் யார் என்பது இன்னும் சரிவர தெரியாத‌ நிலையில் அஜித் ரசிகர்கள் விழித்துக் கொண்டிருக்கின்றனர். நாகர்ஜுனா ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக பேச்சு அடிபடுகிறது. பிரேம்ஜியும் இன்னும் ஒரு புது முக நடிகரும் கூட நடிக்கவுள்ளனர் எனத் தெரிகிறது. இப்படத்தைத் தமிழிலும் தெலுங்கிலும் ஒரே சமயத்தில் எடுக்கவுள்ளதால், அஜித்தும் நாகர்ஜுனாவும் தத்தம் பாத்திரங்களை மாற்றிக் கொள்ளப் போகிறார்களாம். அதாவது, அஜித்தின் ரோலை தெலுங்கில் நாகர்ஜுனாவும், தெலுங்கில் நாகர்ஜுனாவின் ரோலை தமிழில் அஜித்தும் பண்ணப் போவதாக கூறப்படுகிறது. நல்ல விசயம் தான். 'தல'-யை 'ஃபுள் & ஃபுள்' வில்லன் ரோலில் பார்த்து நீண்ட நாளாயிற்று. ரசிகர்களுக்கு விருந்து தான்.

அது கூட பரவாயில்லை. படத்தின் நாயகிகளின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது. முதலில் அனுஷ்கா என்றார்கள். பிறகு, லக்ஷ்மி ராயும் நீத்து சந்திராவும் என்றார்கள். நீத்துவின் பெயர் எதோ கிரிக்கெட் விளையாட்டின் சூதாட்டத்தில் அடிபட்டதால், படத்திலிருந்து நீக்கப்பட்டார் என்று செய்தி கசிந்தது. பின்னர், திரிஷாவை ஒப்பந்தம் செய்தாகிவிட்டது என்றனர். இதற்கிடையில், ஜெனெலியாவும் சினேகாவும் பரிசீலனையில் உள்ள‌னர் என்று இன்னொரு செய்தி. கடைசியாக, வெதிகாவும் பட்டியலில் சேர்ந்தாயிற்று.

கோவாவிற்கு பிறகு இவ்வளவு நாளாகியும், அதீத வேகத்தில் பட வேலைகளில் ஈடுபட்டிருக்கும் வெங்கட் பிரபுவின் சுறுசுறுப்பு மெய் சிலிர்க்க வைக்கிறது. ஏன் இப்படி? அஜித் தானே என்ற எல‌க்காரற‌மா? அல்லது நண்பன் தானே, அஜித் ஒன்றும் கேட்க மாட்டார் என்ற அலட்சியமா? ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.

இனி இவர்கள், 'photoshoot' தொடங்கி, படத்தை ஆரம்பித்து, படபிடிப்பை முடித்து, இசை வெளியீடு நடத்தி, படத்தை திரையரங்குகளுக்கு கொண்டு வரும்வரை ரசிகர்களின் பாடு திண்டாட்டம் தான். நல்லபடியாக‌ படத்தை முடித்தால் சரி...

Friday, August 27, 2010

மங்காத்தா - உள்ளே வெளியே... ஆட்டம் ஆரம்பம்

கடந்த 20-ஆம் தேதியில், நான் மகான் அல்ல படம் வெளிவந்தது அனைவரும் அறிந்ததே. நீண்ட நாட்களுக்குப் பின், அஜித் ரசிகர்கள் அன்று மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியிருந்தனர். இப்படத்துடன் தல அஜித்தின் ஐம்பதாவது படமான மங்காத்தா பட 'டீசரும்' வெளியிடப்பட்டதே அதற்கு காரணம். ஒரே தயாரிப்பாளர் இவ்விரு படங்களையும் தயாரித்ததால்/தயாரிப்பதால் இப்படி ஒரு ஏற்பாடு. என்ன தான் சிலர் ஏற்க மறுத்தாலும், நான் மகான் அல்ல படத்தின் பெரிய 'ஒபெனிங்கிற்கு' மங்கத்தா 'டீசரும்' ஒரு முக்கியக் காரணம் என்பது அசைக்க முடியாத உண்மை. பல இணைய தளங்கள் இதனைப் பற்றி குறிப்பிட்டிருந்தாலும், ஒரு சிலர் அதனை நம்பாத மாதிரி நாடகம் ஆடுவதைக் கண்டால் சிரிப்பாக வருகிறது. சரி, வழக்கம் போல அந்த மகான்களை 'சீரியஸாக' எடுக்காமல் 'டீசருக்கு' வருவோம்.


சுமார் ஒரு நிமிடம் ஒன்பது வினாடிகள் பயணிக்கும் இந்த 'டீசர்', கருப்பு வெள்ளை தொனியில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் வேறு எந்த துணை நடிகர்களும் இல்லை, அஜித் மட்டும் தான். கருப்பு கண்ணாடி அணிந்து, துப்பாக்கியை சரி செய்தவாறு, 'மங்காத்தா டா' என்று வசனம் பேசுகிறார். பின்னனி இசையைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். யுவனின் உழைப்பு நன்கு தெரிகிறது. 'வெஸ்டர்ன் கிலாஸிக்கல்' (Western Classical) இசையைப் பயன்படுத்தியிருக்கிறார். சீரியசாக காண்பிக்கப் படும் 'டீசரை', தன் பின்னனி இசையின் மூலம் ஒரு ஜாலியான உணர்விறகு மாற்றியிருக்க்கிறார் என‌லாம். படம் முழுக்க இவரின் பாடல்களும் பின்னனி இசையும் எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளது.

'டீசர்' பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும், அது மீண்டும் கண்ணாடி, துப்பாக்கி என்று முந்தைய மூன்று படங்களான பில்லா, ஏகன், அசலின் சாயலை நினைவூட்டுவதைத் தவிர்க்க முடியவில்லை. கொஞ்ச நாளைக்கு கண்ணாடி, துப்பாக்கி, கோர்ட் உடை போன்றவற்றை அஜித் தவிர்க்க வேண்டும் என்று ரசிகர்களில் ஒரு பகுதியினர் சகித்துக் கொள்கின்றனர். அவர்களில் நானும் ஒருவன்.


இப்படி தான் படம் இருக்கப் போகிறது என்று ஒரு அறிமுகம் செய்யவே இது முனைகிறது. என்னால் இந்த டீசரை வைத்து எந்த ஒரு முடிவிற்கும் வர இயலவில்லை. டீசர் என்றாலே ஒரு கிண்டலுக்காக எடுக்கப்படும் குறும்படம் என்பார்கள். இயக்குணர் வெங்கட் பிரபுவும் இதையே சொல்லியிருக்கிறார். முந்தைய படங்களின் சாயல் கொண்டே அஜித்தைக் காண்பித்து ரசிகர்களைக் கிண்டலும் கேலியும் பண்ணியிருப்பதாகவும், கவலை வேண்டாம், படம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என்றும் முகப்புத்தகத்தில் தெரிவித்திருக்கிறார். பார்ப்போம்.

அஜித, வெங்கட் பிரபு, யுவன் மற்றும் மங்காத்தா படத்தில் பணி புரியும் அனைவருக்கும் 'ஆல் தி பெஸ்ட்'...
மங்காத்தா பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்... :)

Tuesday, August 3, 2010

அஜித் - பதினெட்டு வருட திரைப் பயணம்...

பதினெட்டு வருடங்களுக்கு முன்பு, இதே நாள் (ஆகஸ்டு 3, 1992), ஒரு இளம் வாலிபர் 'பிரேம புஷ்த‌கம்' எனும் ஒரு தெலுங்கு படத்தின் படபிடிப்பில் தன் சினிமா வாழ்க்கையைத் துவங்கினார்.

தமிழ் சினிமா என்னவென்று துளியும் அறிந்திறாத‌ அந்த இளைஞர், தன் சொந்த கஷ்டங்களைப் போக்கும் வகையில் பணத்திற்க்காக சினிமா துறையைத் தேர்ந்தெடுக்கலானார்.

பொதுவாக அரசியல் ஒரு சாக்கடை என்பார்கள். ஒரு வேளை, அரசியல் கலந்த இந்த தமிழ் சினிமாவும் ஒரு சாக்கடையே என்று தெரிந்திருந்தால் அந்த இளைஞர் தன் திசையை மாற்றியிருக்கலாம். என்ன செய்வது, அதனைப் பற்றி அவருக்கு பாடம் புகட்ட ஒரு ஆசிரியர் இல்லாமல் போனது அவ‌ரது துரதிஷ்டம்.


யாரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன் என்பது தெரிந்திருக்கும். தல அஜித் தமிழ் சினிமாவிற்குள் புகுந்து பதினெட்டு வருடங்கள் உருண்டோடிவிட்டன. ஒன்றா இரண்டா, பதினெட்டு வருடங்கள். ஒவ்வொறு கட்டங்களிலும் அவர் எதிர்நோக்கிய கஷ்டங்கள் எண்ணிலடங்காதது. எத்தனை இன்பம், எத்தனை துன்பம், சோதனைகள், தடைகள், கட்டுப்பாடுகள், அனாவசிய பிரச்சனைகள் என அவர் சந்தித்த விஷயங்கள் அவருக்கு நெருக்கமானவர்கள் அறிந்ததே.

குழந்தைகளின் கைகளைப் பிடித்து நடை பழகிவிடுவார்களே, அது போல இவருக்கு பக்கபலமாக இருக்க யாரும் முன்வரவில்லை. தனியாக போராடினார். அதனால், வெற்றிகளோடு சேர்ந்து சறுக்கல்களையும் எதிர்நோக்கினார். இவரது வெற்றிகளைக் கொண்டாடிய பலர் இவரது கஷ்ட காலத்தில் துணை வராதது வேதணைக்குரியது. அதனால் என்ன, தனது சொந்த அனுபவத்தில் தன்னை மேலும் வலுப்படுத்திக் கொண்டார்.

யாரையும் மிக எளிதாக நம்பிவிடுவார். இவரது இந்த பலவீணத்தை பலர் பல வேளைகளில் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். இவருக்கு எதிரிகளை விட துரோகிகள் தான் அதிகம் என்று புதிதாய் சினிமாவில் புகும் யாரும் சொல்லி விடுவர். தன் முதுகைக் குத்திக் கிழித்தவர்களின் மூலம் இவர் அடைந்த ஒரே பயன், இப்போது நாம் ஒரு பக்குவமான அஜித்தைப் பார்ப்பது தான்.


எந்த‌வொறு பிண்ன‌னியும் இல்லாத‌ இவ‌ர், த‌ன‌க்கென்று ஒரு த‌னி சாம்ராஜிய‌த்தையே உண்டு ப‌ண்ணினார். ர‌சிக‌ர் ம‌ன்றங்கள் எண்ணிக்கையும் இவர‌து ஒவ்வொறு பட ரிலீசின் போது கிடைக்கும் வரவேற்பும் ('ஒபெனிங்') இதற்கு சான்றுகள். என்ன தான் இவருக்கு 'காட்ஃபாதர்' இல்லையென்றாலும் என்னைப் போன்ற‌ பல ரசிகர்களுக்கு இன்று இவர் தான் 'காட்ஃபாதர்', முன்னோடி, 'ரோல்மாடல்' எல்லாம்.

தல, இந்த அகம்பாவம், ஆனவம், துரோகிகள் சூழ்ந்த தமிழ் சினிமாவில் பதினெட்டு வருடங்கள் பயணித்துவிட்டீர்கள். இன்னமும் பல ஆண்டுகள் கடக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்.

கப்பல் இல்லாத துறைமுகமா, தல அஜித் இல்லாத தமிழ் திரையுலகமா...

Thursday, July 1, 2010

அன்றே சொன்னேன்...

கௌதம் மேனன் அவர்கள் அஜித்தின் ஐம்பதாவது படத்தை இயக்குவது எந்த அளவிற்கு சாத்தியம் என்று சமீபத்தில் எழுதியிருந்தேன். அல்லது கணித்திருந்தேன் என்றும் சொல்லலாம். நான் யூகித்த சாத்தியக் கூறுகள் அச்சு அசலாக தவறாக இருப்பினும், அதன் முடிவு என்னமோ சரியாகத் தான் உள்ளது. அதாவது அஜித்தின் ஐம்பதாவது படத்தை கௌதம் மேனன் இயக்கவில்லை. அதைப் படிக்க விரும்பினால் இங்கே செல்லவும்.


இது என்னைப் போன்ற ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம். மின்னலே, காக்க காக்க, 49-ஆவது படம், இப்போது 50-ஆவது படம் என்று இந்த ஏமாற்றம் நான்கு முறை நடந்தேறியிருக்கின்றது. இனிமேல் பழகிக் கொள்ள வேண்டிய சக்தியைப் பெற்றுவிட்டேன். அஜித் கார் பந்தயத்திலிருந்து விலகியது, அதே சமயம் கௌதம் மேனன் தன் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இந்தியில் இயக்கவிருப்பது போன்ற சம்பவங்கள் இவர்கள் இருவரையும் ஒன்று சேர விடாமல் தடுத்து வருகின்றன. ஒரு வேளை அஜித் கார் பந்தயத்திலிருந்து அக்டோபரில் திரும்பியிருந்தால், முன்பே அறிவிக்கப்பட்டபடி கௌதமுடன் சேர்ந்து படம் பண்ணியிருக்கலாமோ? அல்லது நான் முந்தய பதிவில் கணித்தது போல், அப்பொழுது கௌதம் வேறு படத்தில் மும்முரமாக இருந்து அஜித்தின் 50-ஆவது படத்தைக் கைக்கழுவியிருப்பாரோ? பல குழப்பங்கள். இதை விதி என்று எடுத்துக் கொள்ளலாமா?

சுவாரசியமாக, அஜித்தின் அடுத்த 51-ஆவது படத்தையும் தயாநிதி அழகிரி தயாரிக்கக்கூடும் என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆகவே, 51-ஆவது படத்தை கண்டிப்பாக, நிச்சயமாக, உறுதியாக கௌதம் இயக்குவார் என்று சில தரப்பினர் சொல்கிறார்கள். மாறாக, இதைப் பற்றி அஜித்தோ அல்லது கௌதமோ இன்னும் அதிகாரப்பூர்வமான பதில்கள் கூறாதது வருத்தத்தை அளிக்கின்றது. 51-ஆவது படத்திலும் இந்த கூட்டணி சேரவில்லையேல், ஆச்சிரியப்படுவதற்கில்லை. ஏற்கனவே சொன்னது போல, இன்னுமொறு ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள சக்தி பிறந்துவிட்டது. என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே...

51-ஆவது படத்தைப் பற்றி பேசினோம். 50-ஆவது படம் என்ன ஆயிற்று என்று கேட்கலாம். சமீபத்திய தகவல் படி, இதனை தயாநிதி அழகிரி தயாரிக்க வேறொரு இயக்குணர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். அவர் தான் 'சென்னை 600028' புகழ், வெங்கட் பிரபு. இப்போதைக்கு படத்தின் பெயர் 'மங்காத்தா - உள்ளே வெளியே'. மங்காத்தாவின் களத்தில், இது மும்பையில் நடக்கும் தாதா கதை என்று தெரிகிறது. அஜித்திற்கு தாதா/ரௌடி பாத்திரம் தான் செய்ய வரும் என்று முடிவு பண்ணிவிட்டார்கள் போல. தலைப்பையும் ஒரு வரி கதையையும் கேட்டால், சுவாரசியமாகத் தான் இருக்கிறது.


உண்மையைச் சொல்லப் போனால், இந்த கூட்டணியில் எனக்கு அவ்வளவாக ஈடுபாடு இல்லை. வெங்கட் பிரபு இதுவரை 'சின்ன' ஹீரோக்களை கும்பலாக வைத்து படங்கள் எடுத்தவர். அவருக்கு தனி ஒரு 'மாஸ்' ஹீரோ படம் பண்ணும் அளவுக்கு திறமை உள்ளதா என்று படம் வந்த பின்னரே தெரியும். வெங்கட் பிரபுவை அவமானப் படுத்துவதோ அல்லது அவரது திறமையை குறை சொல்வதோ, சந்தேகிப்பதோ என் நோக்கம் அல்ல.

இது நம் 50-ஆவது படம். எதிர்பார்ப்பை எகிற வைக்கும் படம். அப்பேற்பட்ட விஷயத்தில், இத்தனை 'ரிஸ்க்' வேண்டுமா என்பது தான் என் கேள்வி. இவர் ஒரு ஆஷ்தானமான அஜித் விசிறி. இவரும் சரணைப் போல படம் முழுவது தல புராணம் பாடி காரியத்தைக் கெடுத்து விடுவாரோ என்ற அச்சத்தைத் தவிர்க்க முடியவில்லை. அதே சமயத்தில், ஒரு பக்கம் சிறிதளவு சந்தோஷம். இந்த இயக்குணர் ஓரளவு அனுபவம் மிகுந்தவர். ராஜு சுந்தரத்தையே தாங்கிக் கொண்டோம். எப்படி நம்ம 'தல'யை வெங்கட் பிரபு கையாளுகிறார் என்று பார்ப்போம். எல்லாம் இனிதே நடைப்பெற இறைவனைப் பிரார்த்திகிறேன்.

Wednesday, May 26, 2010

சோதனை மேல் சோதனை... - 2

சமீபத்தில், இயக்குணர் கௌதம் மேனன் ஒரு தளத்திற்கு பேட்டி அளித்துள்ளார். தயாநிதி அழகிரியின் படத்தில் அஜித்தை இயக்கப் போவது பற்றி கேட்கும்போது இவ்வாறு கூறியுள்ளார்.

“ I have no news about it, for the last few months I have no contact with Ajith. At the moment my focus is on my Hindi VTV remake.”


அதாவது, தான் அஜித்தின் ஐம்பதாவது படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதோடு சரி, அஜித்துடனோ அல்லது த்யாநிதி அழகிரியுடனோ (தயாரிப்பாளர்), அவருக்கு சில மாதங்களாக தொடர்பே இல்லை என்கிறார். அதுமட்டுமில்லாமல், தனது முழு கவனமும் இப்போது ஹிந்தி விண்ணைத் தாண்டி வருவாயாவில் திரும்பிவிட்டது என்று சொல்லி என்னைப் போன்ற பலர் 'தல'யில் பாறையைத் தூக்கிப் போட்டுள்ளார்.

தல, என்ன இது? இதனைக் கேள்விப் பட்டதும், பயங்கர கோபம் எனக்கு. இதற்கு பெயர் தான் அலட்சியம் என்பார்கள். உங்களைப் பொருத்தவரை நடிப்பு வெறும் தொழில் என்றீர்கள். சரி, அது என்னமோ உண்மை தான். ஆனால், உங்கள் தொழிலிலில் ஒரு அக்கறை வேண்டாமா?

என்ன நடக்கப் போகிறது என்று நான் சொல்லவா? எப்படியும் கார் பந்தயம் முடிந்து அக்டோபரில் மீண்டும் சினிமாவிற்கு திரும்பி விடுவீர்கள். அதற்கிடையில், கௌதம் தன் ஹிந்தி விண்ணைத் தாண்டி வருவாயாவில் மூழ்கி இருப்பார். ஒன்று உங்களை அவரது படம் முடியும் வரைக் காத்திருக்கச் சொல்வார், இல்லையேல் முடியாது என்று ஒதுங்கிக் கொள்வார். உங்களது 'கால்ஷீட்டை' விரயமடிக்க விரும்பாத தயாரிப்பாளர், வேறு இயக்குணருக்கு மன்றாடுவார். கடைசியில் ஒரு மொக்கை இயக்குணர் சிக்க, நீங்களும் பரிதாபப் பட்டு, ஒத்துக் கொள்வீர்கள். ஏகன், அசல் வரிசையில் இன்னொரு அமர காவியம். இது தானே உங்கள் விருப்பம்?


நீங்கள் கார் பந்தயத்திற்கு போனது எல்லாம் உங்கள் விருப்பம். எனக்கு அதில் துளியும் வருத்தமில்லை. ஆனால், அதே சமயம், உங்கள் 'தொழிலில்' சற்று கவனம் செலுத்த வேண்டாமா? ஏனென்றால், அது தான் நிரந்தரம். நீங்கள் அவ்வப்போது கிடைக்கும் சிறிய ஓய்வுகளில் சென்னை வருக்கிறீர்கள். அந்த சமயங்களில், இயக்குணருடனும் தயாரிப்பாளருடனும் கதை விவாதத்தில் ஈடுபடலாம்; படத்தின் இதற நிலவரங்களைப் பற்றி ஆலோசனை நடத்தி அவர்களுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். அப்போது தான் உங்கள் நாட்டம், அக்கறை, ஈடுபாடு அவர்களுக்கு புலப்படும். இல்லையேல், அவரவர் தத்தம் வேலைகளைப் பார்க்கச் சென்று விடுவார்கள். அதைத் தான் கௌதம் இப்போது செய்கிறர்ர். அவர் மேல் தவறு கூற மாட்டேன். கண்டிப்பாக தவறு உங்கள் மீது தான்...

பி.கு ஒரே ஒரு வேண்டுகோள். கௌதம் மேனன் உங்களது ஐம்பதாவது படத்தை இயக்கவில்லையேல், தயவு செய்து வேறு ஒரு நல்ல கைத்தேர்ந்த இயணரைத் தேர்வு செய்யுங்கள்...

Friday, May 21, 2010

சோதனை மேல் சோதனை... - 1

சமீபத்தில் கார் ரேஸில் கிடைத்த ஓய்வின்போது சென்னை திரும்பினார் அஜித். வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளிக்க நேர்ந்தது. வழக்கமான முட்டாள்தனமான கேள்விகளுக்கு பொருமையாக பதில் அளிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


"மட்டமான படங்களில் நடிக்கிறதுக்குப் பதிலா, சும்மா வீட்ல உட்காரலாம். தொடர்ந்து மட்டமான, குப்பையான படங்களா நடிச்சு என் ரசிகர்களை நான் ஏமாத்த விரும்பலை. அதுவும் இப்போ தியேட்டருக்கு வந்து சினிமா பார்க்கிறது பெரிய செலவு பிடிக்கிற விஷயம். அவ்வளவு காசு செலவழிச்சு தியேட்டருக்கு வர்ற ரசிகர்கள் யாரும் நிச்சயம் குப்பையான படங்கள் பார்க்க விரும்பமாட்டாங்க.

என்னைப் பொறுத்தவரை, மட்டமான படங்களில் நடிக்கிறதுக்குப் பதிலா, சும்மா வீட்ல உட்காரலாம். என்னால் தொடர்ந்து வருஷத்துக்கு 200 நாள் கால்ஷீட் கொடுத்து கோடிக் கோடியாச் சம்பாதிக்க முடியும். ஆனால், எனக்கு அதில் ஆர்வம் இல்லை. இந்த அஜீத் மனசுக்குப் பிடிச்சதை மட்டும்தான் செய்வான். மனுஷனுக்குச் சந்தோஷம்தான் சார் முக்கியம்!"
என்றிருக்கிறார்.

தல, இருந்தாலும் நீங்கள் இவ்வளவு அப்பாவியாக இருத்தல் கூடாது. இன்றைய தேதியில் யார் தான் தோல்விப் படங்கள், மட்டமான படங்கள் கொடுக்கவில்லை? யாரும் இந்த விசயத்தில் விதிவிளக்கில்லை. நீங்கள் இப்படி எல்லாம் சாதாரனமாக, வெளிப்படையாக பேசுவது எனக்கு சரியாகப் படவில்லை.

இருப்பினும், நீங்கள் உங்கள் பதிலில் என்ன சொல்ல வருகிறீர்கள் என எனக்கோ அல்லது உங்களின் ரசிகர்களுக்கோ அல்லது யோசிக்கும் திறன் உள்ள எவருக்கும் நன்கு புலப்படும். மட்டமான படங்கள் தருவது தவிர்க்கப் பட வேண்டிய விசயம் தான். இல்லை என்று சொல்லவில்லை. ரசிகர்களின் பணமும் நேரமும் விரயமாவது பற்றி நீங்கள் அக்கறையுடன் பேசும்போது இந்தக் காலத்திலும் இப்படி ஒரு நடிகரா என வியந்து போகிறேன். உங்களை சுற்றியுள்ள பிற நடிகர்களைப் பாருங்கள். அவர்கள் இது போன்ற கருத்துக்களை எதேனும் ஒப்பிப்பதுண்டா? தோல்வி படமோ மட்டமான படமோ, சற்றும் பொருட்படுத்தாமல் அடுத்த படத்திற்கு சென்றுவிடுவர். நீங்கள் மட்டும் ஏன் இப்படி?

அதே சமயம், உங்களது இந்த பதிலை பொது மக்கள் வேறு மாதிரி பார்க்கக் கூடும். அதாவது, உங்களுக்கு 'மார்கெட்' போய்விட்டது. படங்கள் சரியாக போகாத பட்சத்தில் தான் மீண்டும் கார் பந்தயங்களுக்கு திரும்பி விட்டீர்கள் என பல கருத்துகள் உங்களைச் சுற்றி வந்த வண்ணம் உள்ளன. அதனால், இது போன்ற சாக்குபோக்குகள் உங்களுக்கு தேவை படுகிறது என எண்ணக் கூடும்.

மேலும், நீங்கள் ஒன்றும் அறுபதாம் வயதில் உள்ளவர் இல்லையே. அந்த வயதில் உள்ளவர்களை சும்மா இருப்பதே மேல் எனலாம். கண்டிப்பாக நீங்கள் அல்ல. நீங்கள் அறுபது வயதைத் தாண்டும் போது அந்த கால கட்டம், சூழ்நிலை கண்டிப்பாக வேறுபட்டிருக்கும். நிறைய புதியவர்கள் வந்துவிடுவார்கள். ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன், உங்களின் இன்றைய படங்கள் தான் உங்கள் பேரையும் புகழையும் எதிர்காலத்தில் நிர்னயம் செய்யும். சும்மா இருந்தால் என்ன கிடைக்கும்?

அப்படியொன்றும் நடிப்பில் நீங்கள் சலைத்தவர் அல்ல. உங்களுல் ஒரு மாபெறும் நடிகன் இருக்கிறான். அந்த திறமையை வெளியே கொண்டு வாருங்கள். சின்ன பட்ஜெட் படங்களாக இருந்தாலும் பரவாயில்லை, தாராளமாக பணியாற்றலாம். ஓரளவு வெற்றிக் கனியை ருசித்த மிஷ்கின், வசந்தபாலன், ஜனநாதன் போன்ற இயக்குணர்களுடன் இணையளாம், தப்பே இல்லை. இப்போது உங்களுக்குத் தேவை ஒரு நல்ல, சுவாரசியம் மிக்க கதை, திரைக்கதை தரக் கூடிய ஒரு இயக்குணர். அதற்கு முதலில் வழி தேடுங்கள். அதை விடுத்து தயவு செய்து, இது போன்ற கருத்துக்களைக் கூறி என்னைப் போன்ற ரசிகர்களை மன உலைச்சலுக்கு ஆளாக்காதீர்கள்...

Saturday, May 1, 2010

எனது காட்ஃபாதருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

மே 1 என்றாலே அனைவருக்கும் உடனே நினைவிற்கு வருவது தொழிலாளர் தினம் தான். ஆனால், என்னைப் போன்றவர்களுக்கு இத்தினம் தொழிலாளர் தினமோடு நின்றுவிடவில்லை. இன்று ஒரு முக்கியமான நாள். எங்கள் 'தல' அஜித்தின் பிறந்த நாள். இன்று அவர் தனது 39-ஆவது பிறந்த நாளை எட்டி இருக்கின்றார்.


வெற்றியோ தோல்வியோ இரண்டையும் கையாளும் பக்குவம் இவரிடம் நிறைந்திருக்கிறது. தொடர்ந்து போராடும் குணம் உடைய இவரை, பொதுவாகவே தன்னம்பிக்கையின் சிகரம் என்பார்கள். எதற்காகவும் யாருக்காகவும் தனது தன்மானத்தையும் சுய மரியாதையையும் விட்டுக் கொடுக்க மாட்டார். தனக்கு சரி என்று பட்டால், நிச்சயம் அதனைச் செய்ய தயங்காதவர் இவர். போக விட்டு பின்புறம் பேசுவது இவருக்கு பழக்கமில்லை. எதையும் நேருக்கு நேராக எதிர் கொள்ளும் ஆற்றல் மிக்கவர். அதனாலோ என்னவோ, பொதுவாகவே சினிமா துறையில் இவரை எல்லாருக்கும் பிடிக்கும்.

எல்லாவற்றிற்கும் மேல், இவர் குணத்தில் தங்கம். வாழ்ந்தால் இவரைப் போல வாழ வேண்டும் என பலர் சொல்லி கேட்டிருக்கிறேன். பிறருக்கு உதவும் செய்திகளைக் கூட வெளியில் கசிய விடாதவர். தன் வாழ்க்கையை தனக்கு பிடித்தாற் போல வாழ்ந்து காட்டுகிறார். ஒரு நடிகராக அப்பாற் பட்டு மோட்டார் சைக்கிள், கார் பந்தயம், புகைப்பட வள்ளுனர், மரங்கள் நடுதல் மற்றும் ஏரோ மோடலிங் போன்ற பல்வேறு விசயங்களில் இவரது ஈடுபாடே இதற்கு சான்று. அதனால் தான் என்னைப் போன்ற கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு இவர் ஒரு முன்னோடியாகத் திகழ்கின்றார்.


இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அஜித் அண்ணா. உங்களை வாழ்த்த வயதில்லை. நீங்கள் சினிமாத் துறையிலும் சரி, கார் பந்தயங்களிலும் சரி, தொட்டதெல்லாம் பொன்னாகி மென்மேலும் வளர இறைவனை வேண்டிக் கொள்கின்றேன். அன்பான மனைவி, அழகான குழந்தையோடு நீங்கள் வாழ்க்கையில் சீர் சிறப்புடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ கடவுள் ஆசிர்வதிப்பாராக...

அக்டோபர் மாதம் வரை கார் பந்தயத்தில் கவனம் செலுத்துங்கள். யாரைப் பற்றியும் எதை பற்றியும் கவலை வேண்டாம். ஐம்பதாவது படம் சரவெடியாய் வெடிக்க வேண்டும். தங்களின் ரசிகன் என்பதில் எனக்கு எப்போதும் பெருமை. உண்மையிலேயே நீங்கள் சாம்பலிலிருந்து எழுந்த ஒரு 'பீனிக்ஸ்' பறவை தான். "மாதா பிதா அஜித் தெய்வம்" என்ற எனக்கு அன்றும் இன்றும் இனி என்றும் நீங்கள் தான் 'தல', ரோல் மடல், காட்ஃபாதர் எல்லாம்... தல போல வருமா...

அனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துகள். :)

Tuesday, April 6, 2010

'ஃபார்முலா' 2-வில் அஜித் - வேறுபட்ட கருத்துக்கள்

இன்னும் சில தினங்களில் (ஏப்ரல் 16) 'ஃபார்முலா' 2 கார் பந்தயம் துவங்கும் பட்சத்தில், சில நாட்களாக மனதில் உருத்திக் கொண்டிருக்கும் விசயத்தை இந்த பதிவில் பகிர்கிறேன்.


அஜித் அவர்கள் இந்த முறை இக்கார் பந்தயத்தில் கலந்து கொள்வது பற்றி அனைவரும் அறிந்திருப்பீர். இவரது பங்கேற்பு பற்றி ரசிகர்கள் மத்தியிலும் சரி, பொது மக்களிடமிருந்தும் சரி, கலவையான கருத்துக்கள் உலா வந்த வண்ணமாக உள்ளன. இதுவரை நான் பார்த்த, கேட்ட, அறிந்த அனைத்து கருத்துக்களையும் தொகுத்துள்ளேன். இதனை மூன்று பிரிவினராக வகைப்படுத்தி, அதிலும் ரசிகர் கருத்து, மக்கள் கருத்து என மேலும் பிரித்துள்ளேன்.


முதல் பிரிவினர் - இந்த பிரிவினர் முழு ஆதரவு தருகின்றனர்

  • ரசிகர்கள்

  • "கார் பந்தயம் என்றால் சும்மாவா... எத்தனை 'ரிஸ்க்க்'. இந்த மனுஷன் நம் நாட்டிற்கு பெருமை தேடித் தர முயன்றுக் கொண்டிருக்கிறார். இது பாராட்டத் தக்கச் செயலே. அஜித் ரசிகனாக இருப்பதில் பெருமைப் படுவது மட்டுமில்லாமல், இவரது வெற்றிக்குக் கடவுளை பிரார்த்திக்கிறோம். இரண்டு வருடத்திற்கு ஒரு படம் வந்தாலும் பரவாயில்லை. யாரைப் பற்றியும் எதனைப் பற்றியும் கவலை வேண்டாம். இப்போதைக்கு கார் பந்தயத்தில் கவனம் செலுத்துங்கள். நீ ஆடு தல... உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம்", என்கின்றனர்.

  • பொது மக்கள்

  • "மிகவும் ஆபத்தான விளையாட்டு. இவரது மன தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் பாராட்டியே ஆக வேண்டும். குறிப்பாக தமிழ் நாட்டைச் சேர்ந்த இவர் வெற்றி பெருவாரானால், நமக்கெல்லாம் அது பெருமைச் சேர்க்கும் சாதனை அல்லவா... இதில் வெற்றியடைவதும் தோல்வியடைவதும் அப்பாற்பட்ட விசயம். தமிழ் நாட்டு பிரதிநிதியாக இவர் கலந்து கொள்கிறாரே, அதுவே போதும். அஜித்திற்கு ஒரு 'சல்யூட்'. ஜெயிப்பார் என நம்புவோம். வாழ்த்துகள். ஆல் தி பெஸ்ட்...", என்று ஊக்கமும் உருதுணையும் அளிக்கின்றனர்.


    இரண்டாம் பிரிவினர் - இவர்கள் சற்று நடுநிலை பார்வையுடையவர்கள்

  • ரசிகர்கள்

  • "இதில் எங்களுக்கு உடன்பாடில்லை. இவரது படங்களுக்கு மட்டுமே நாங்கள் ரசிகர்கள். தல, கடைசி படம் சரியா போகல... இந்த நேரத்தில் ஏன் இந்த திடீர் முடிவு? வருடத்திற்கு இரண்டு படங்கள் பண்ணுங்க... பந்தயத்தில் ஏதாவது ஆகிவிட்டால், நாங்கள் எல்லாம் என்ன பண்ணுவோம்... எங்கே போவோம்... கப்பல் இல்லாத துறைமுகமா, தல அஜித் இல்லாத திரையுலகமா... நீங்கள் இல்லாத திரைத் துறையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.", என்று புலம்புகின்றனர்.

  • பொது மக்கள்

  • "பேசாம இவர் படங்களில் மட்டும் கவனம் செலுத்தலாம். நமக்கு வேண்டியது இவரிடமிருந்து சுவாரிசியமான, ஜனரஞ்சக படங்கள் மட்டுமே. குடும்பம், குழந்தை என்றாகிவிட்டது. இந்த தருனத்தில், இப்பேற்பட்ட 'சீரியஷான" போட்டிகள் எல்லாம் அவசியம் இல்லை. ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் மாதிரி ஆகிவிட்டது இவரது நிலை...", என்கின்றனர்.


    மூன்றாம் பிரிவினர் - வெறும் வாய்ச் செவடால் ஆசாமிகள்

  • ரசிகர்கள்

  • எனக்கு தெரிந்து ரசிகர்கள் இந்த பிரிவில் வரவில்லை. முதலாம் அல்லது இரண்டாம் பிரிவுகளில் மட்டுமே இவர்கள் அடங்குவர்.

  • பொது மக்கள்

  • "ஜெயிச்சிட்டாலும்... எதற்கு இவருக்கு இந்த வீர விளையாட்டு? இப்போ இவரை கலந்துக்கச் சொல்லி யார் அடிச்சா? இவர் ஜெயிப்பது சாத்தியமே இல்லை. கடைசி இரு படங்கள் சரியாக போகவில்லை. அதனால், கார் பந்தயங்களில் கலந்து கொள்கிறார். பணம் நிறைய இருக்கு போலும். அதான் இப்படி செலவு செய்கிறார். சில வருடங்களுக்கு முன்னால் இதையே தான் செய்தார். படங்கள் சரியாக போகவில்லை, கார் பந்தயங்களில் நாட்டம் செலுத்தினார். மீண்டும் நடிக்க வந்தார். இவர் ஜெயித்தால் என்ன தோற்றால் என்ன...", என கேலியும் கிண்டலுமாக பேசுகிறார்கள்.


    கடைசி பிரிவினருக்கு ஒரு அன்பான வேண்டுகோள். ஒரு மனிதன் ஒரு முயற்சியில் இறங்கும்போது, நீங்கள் ஆக்கமும் ஊக்கமும் தராவிட்டாலும், அவர்களது மனம் நோகும் அளவிற்கு முட்டுக்கட்டையாக பேசுவது சரியல்ல. உங்களது அபசகுணமான பேச்சு அவர்களை மன உளச்சளுக்கும் வீழ்ச்சியிலும் ஆளாக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. தட்டிக் கொடுக்காவிட்டாலும் எட்டி மிதிக்காமல் இருப்பதே சிறந்தது.

    குறிப்பாக பிற நடிகர்களின் ரசிகர்கள் இந்த பிரிவில் அடங்குவர். எத்தனை விஜய், விக்ரம் அல்லது சூர்யா ரசிகர்கள் இப்போட்டியில் அஜித்தின் பங்கேற்பிற்கு ஆதரவு தருகின்றனர் என்பது கேள்விக்குறியே. இவர்களது பார்வையில், அஜித் ஒரு நடிகராக பார்க்கப்படுகிறாரே தவிர 'ஃபார்முலா' 2-வில் பங்கேற்க்கும் தமிழ்நாட்டுப் பிரதிநிதியாக அல்ல; இந்திய பிரஜையாக அல்ல. இவர்களது எண்ணம் முழுதாக மாற வேண்டும். அனைவரது ஆசியும் பிரார்த்தனையும் வெற்றி பெற அஜித் அவர்களுக்கு தேவை.


    நான் எந்த பிரிவைச் சேர்ந்தவன் என்ற கேள்வி எழலாம். நிச்சயமாக முதலாம் ரசிகர் பிரிவே. அஜித் ரசிகனாக எனக்கு இது பெருமை படக்கூடிய விசயம். ஒரு தமிழன் இது போன்ற போட்டிகளில் பங்கேற்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தருகின்றது. அஜித் கண்டிப்பாக வெற்றி வாகை சூடுவார் என நம்பிக்கை இருக்கிறது. அதே சமயத்தில், அக்டோபர் முதல் நல்லதோர் கூட்டணியுடன் படம் பண்ணுவார் என்ற எதிர்பார்ப்பும் எனக்கு இருக்கிறது. அவரது பாதுகாப்பிற்கும் வெற்றிக்கும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன். 'குட் லக்' தல...

    இதில் நீங்கள் எந்த பிரிவைச் சேர்ந்தவர்? பின்னூட்டத்தில் போடலாமே...

    பி.கு படங்களுக்கு starajith.com தளத்திற்க்கு நன்றிகள்

    Tuesday, March 16, 2010

    மோகன்ராம் அவர்களுக்கு நன்றிகள்

    மோகன்ராம் அவர்கள் நம்ம 'தல' அஜித்தைப் பற்றியும் சமீபத்தில் அஜித்தைச் சர்ச்சைக்குள்ளாக்கிய பேச்சு பற்றியும் தன் வலைப்பூவில் இடுகை இட்டுள்ளார். அவருக்கு நன்றி தெரிவிக்கவே இந்த பதிவு.


    ஒரு சக சினிமா குடும்பத்திலிருந்து ஒருவராக, தோழனாக தன் இடுகையை எழுதியிருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த விஷயத்தில், இவரைப் போல் சினிமா துறையில் உள்ளவர்கள் உறுதுனையாகவும் பக்கபலமாகவும் இருப்பது (நியாயம் நம் பக்கமிருக்கும் பட்சத்தில்) என்னை பெருமிதத்தில் ஆழ்த்தியது.

    அவர் அலசியுள்ள முக்கிய கருத்துக்களை பட்டியளிட்டுள்ளேன். இதோ:

  • அஜித் அவர்களின் பேச்சில் வெளிப்பட்ட நியாயங்கள்

  • பேச்சின் இடம், பொருள், ஏவல்

  • அஜித்தின் பாராட்டக்குரிய மன தைரியம் மற்றும் நல்ல குனாதிசயங்கள்

  • ரஜினி அவர்களின் ஆமோதிப்பு


  • அந்த இடுகையை படிக்க இங்கே செல்லவும்.

    மோகன்ராம் அவர்களுக்கு அனைத்து அஜித் ரசிகர்கள் சார்பாக கோடி நன்றிகள். :)

    Monday, March 8, 2010

    அஜித் + கௌதம் கூட்டணி = சாத்தியமா?

    இதுவரை நாம் அறிந்தவை:

    1. தயானிதி தயாரிப்பில், கௌதம் அஜித்தின் ஐம்பதாவது படத்தை இயக்கவுள்ளார்.

    2. இப்படத்தின் ஏனைய முன் ஏற்பாடுகளை கௌதம் செய்து வருவதாக அவரே தனது அன்மைய பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

    3. இதற்கிடையில், அஜித் திடீரென கார் பந்தயத்தில் (இந்த முறை F2)கலந்து கொள்வதாக முடிவு எடுத்துள்ளார்.

    4. இந்த கார் பந்தயம் வரும் ஏப்ரலில் துவங்கி அக்டோபரில் முடிவடையும் போல தெரிகிறது.

    சரி, இப்போது விசயத்திற்கு வருவோம்.

    இப்போது தான் அசல் கொடுத்த 'துன்ப' அதிர்ச்சியிலிருந்து ஒரு வழியாக எழுந்துக் கொண்டிருக்கிறேன். அதற்குள் இடி போன்ற ஒரு செய்தி. என்ன அது? அதாவது, கௌதம் சிம்புவை வைத்து அடுத்து ஒரு ஆக்க்ஷன் படம் எடுக்கப் போகிறாராம்.


    ஏப்ரல் முதல் அக்டோபர் வரை தனக்கு வசப்படும் கால அவகாசத்தை, நீண்ட நாட்களாக கெடப்பில் கிடக்கும் சமீராவின் 'த்ரில்லர்' படம் ஒன்றுக்கு செலவிடுவார் என்று செய்திகள் உளாவின. அதுமட்டுமின்றி, அந்த படம் முடிவடையும் தருவாயில் உள்ளதாகவும், சுமார் ஓரிரு மாதங்களில் முழுமை அடையக் கூடும் என்பதையும் அறிந்தேன். நன்று.

    ஆகவே, எப்படியும் அக்டோபர் மாதத்தில் இந்த கூட்டணி சேருமென்று கனவுலகில் மிதந்தேன். யார் கண் பட்டதோ தெரியவில்லை, அடுத்து கௌதம் சிம்புவுடன் சேர்ந்து இன்னொரு படம் பண்ணுவதாக செய்திகள் வந்த வண்ணமாக இருக்கின்றன. அதற்கு என்ன, என்கிறீர்களா?

    இது முழுக்க முழுக்க புதிய 'ப்ராஜெக்ட்' என்பது குறிப்பிடத்தக்கது. கௌதம் அதிக பட்சம் நான்கே மாதங்களில் படத்தை முடித்து வெளியிடும் பேரரசு அல்ல என்பதை நினைவில் கொள்க. எப்படியும் ஆரு மாதங்களாவது வேண்டும் இவருக்கு. அதற்கப்புறம், 'post production' வேலைகள், பட ரிலீஸ் என சுமார் இரு மாதங்கள் தேவைப்படும் (எனது குறைந்த பட்ச கணிப்பு). ஆக, இந்த ப்ராஜெக்ட் எப்படியும் முடிய இந்த ஆண்டு இருதியாகிவிடும்.

    இதற்கிடையே, கார் பந்தயம் முடிந்து திரும்பிவிடுவார் அஜித். கால்ஸீட்டை விரயமடிக்க விரும்பாத தயாரிப்பாளர் ஏதாவது சில மொக்கை இயக்குனர்களை அஜித்திற்கு பரிந்துரைச் செய்வார். அஜித்தான் கருணையின் மரு உருவம் ஆயிற்றே. உடனே, அந்த பட்டியலில் இருந்து, ஏதாவது ஒரு 'கைத்தேர்ந்த' இயக்குனரை தேர்வு செய்யக்கூடும். மீண்டும் தன் 'நண்பன்' சரணுடனே சேர்ந்தாலும் ஆச்சிரியப் படுவதற்கில்லை.

    இறுதி பத்தியில் நான் சொன்னவை ஏற்கனவே நடந்தவை தானே. ஆம், அசலைத் தான் சொல்கிறேன். போட்ட தழும்பு இன்னும் ஆறவில்லை. அதற்குள் இன்னொன்றா?
    இப்போழுது, நீங்கள் சொல்லுங்கள். அஜித் + கௌதம் கூட்டணி = சாத்தியமா?

    வருத்தம், பயம் & கலக்கத்துடன்,
    ஒரு ரசிகன்...

    Tuesday, March 2, 2010

    தவறு என் மீது, அஜித் நல்லவர் - இயக்குனர் பாலா

    அஜித்திற்கும் இயக்குனர் பாலாவிற்கும் நடந்த யுத்தம் அனைவரும் அறிந்ததே. குறிப்பாக, அஜித் ரசிகர்கள் இதை அவ்வளவு இலகுவாக மறந்திருக்க மாட்டார்கள். சமீபத்தில் நக்கீரனில் 'கொஞ்சநேர வருத்தம்' எனும் தலைப்பில் இயக்குனர் பாலாவின் குமுறல் ஒன்று வெளியானது. அது பின்வருமாறு:



    தனக்கும் அஜித்திற்கும் நிகழ்ந்த மனக் கசப்பில் தவறு தன் மீது தான் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அஜித் தன்னை விட நல்லவர், அப்படி சொல்லவதை விட, அஜித் அளவிற்கு அவர் நல்லவர் இல்லை என்று கூறியிருப்பாதாக அந்த செய்தி கூறுகிறது.

    இது உண்மை ஆயினும், அஜித் ரசிகனான எனக்கு, என் சந்தோஷத்தை வார்த்தையால் சித்தரிக்க இயலவில்லை. உண்மையை நீண்ட நாட்களாக மறைத்து வைக்க முடியாது என்பது புலப்படுகிறது. 'Better late than never' என்று சொல்வார்களே, அது போல இப்போதாவது உண்மையை தன் வாயாலே ஒப்புக் கொண்டாரே, பாலாவிற்கு முதலில் எனது நன்றிகள்.

    இனி வரும் காலங்களில், இவர் அஜித்துடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்புகள் வரலாம். இந்தக் கூட்டணியை அஜித் ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என கேள்விகள் எழலாம், எழும். மற்றவர்களைப் பற்றித் தெரியவில்லை. என்னைப் பொருத்தவரை, இதில் நான் 'neutral' தான். இருவரும் சேர்ந்து படம் பண்ணினால், வரவேற்பேன். இல்லையேல், யாருக்கும் நட்டம் இல்லை என்பேன்.

    ஒரு சில ரசிகர்கள், அண்ணன் கவுண்டமணி சொன்னது போல "கோழி குருடா இருந்தா என்ன, குழம்பு ருசியா இருக்கணும்..." எனும் கொள்கையை இதில் புகுத்துகிறார்கள். அதாவது, இருவரும் சமரச நிலை அடைந்து ஒரு படத்தில் பணி புரிந்தால் நன்றாகத் தான் இருக்கும் என அவர்கள் நம்புகிறார்கள்.

    இருப்பினும் எனக்கு, இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்பது இன்னும் பனி மூட்டமாகவே உள்ளது. எதற்காக இந்த திடீர் அறிக்கை? ஏன் இந்த திடீர் மன மாற்றம் பாலாவிற்கு? இப்படி பல கேள்விகள் விடையின்றி தவிக்கின்றன. இன்னொன்று, இந்த செய்தி நக்கீரனில் வெளிவந்தது மேலும் இதன் நம்பகத்தன்மையை குறைக்கிறது.

    எது எப்படியோ, நமது கையில் என்ன இருக்கிறது? சினிமாத் துறையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆண்டவனுக்கே வெளிச்சம்.

    பி.கு இந்த கூட்டணி சேரக் கூடுமா? சேர வேண்டுமா? சேரக் கூடாதா? பின்னூட்டத்தில் உங்களது கருத்துக்களைப் பகிரலாமே...

    Monday, January 25, 2010

    Aasal Theatrical Trailer



    I was pretty upset after watching the low quality print recorded from a theatre using camera phone. I compared it with Billa's trailer and went on dissing it at once. But, deep down I knew it can't go this bad and I just waited for the actual and high quality of the same. Guess, my wait has paid off.

    I really liked it. Trailer simply looks slick and uber cool. All the frames chosen are very sylish and to me Billa's trailer still stands tall. Even though Aasal trailer is nowhere near Billa's, it has elements in it's own terms. Trailer opens up with Nadigar Thilagam offering pooja, "Sivaji Productions" title appears and the next frame shows our man's walk with camera focusing on legs. I couldn't take my eyes off stunning shots the trailer carries after that. The trailer really travels in a fast pace, and I just pray the whole movie to be like this.

    What I like

    1. Mr.Smart of Kollywood, looks handsome as usual. From the trailer alone, my primary concern, weight doesn't seems to be a problem. Thala looks perfect in all frames. Keeping my fingers crossed as Thala looks great throughout the flick. Just watch out for the mannerisms, style and charisma Ajith shows on screen. For example, take a lool again on the last portion, Ajith walking ala boxer.
    In short, Thala Ajith - Screen Presence redefined...

    2. It seems both the ladies have quite meaty roles to play as well as all five villains. Locations are fresh and pretty new to Thamizh audience - sure to lift the whole movie to one more level up. Costumes are another plus point. Be it villain or anyone whithin the frame, all look fantastic with their outfit.

    3. A few dialogues uttered by protagonist are well penned and pretty sharp. The way Ajith delivers those dialogues is just too good. One can't deny the vast improvement of dialogue delivery and modulation of our man here.

  • Vaai tappu senjA, kannu kAtti koduthirum...

  • Ethiri kannukku agap padAma adikkanumnA, avan kaN imaiku adila pOyidanum...


  • There's one more line spoken by Sampath, one of the villains. Sort of glorifying our hero.

  • Yaar sonnAlum kEtka mAttAn. Thanakku serinu pattA, athu tappunnAlum atha seriyA pannuvAn...


  • 4. Looks like stunts are going to be major highlight of the movie. Heavy usage of bike, cars, jet, boat and the chases are impressive. Cameraman needs a special mention. Being the best cameraman's assistant, he managed to live up to it. I just curious to see how the song sequences are shot.

    5. I feel happy and proud at the same time, to see "Inay Iyakkam: Ajith Kumar" in the credit section.

    My Worries

    1. Background score is quite unimpressive. Besides, last few seconds - the vroom sounds of car engine and the way that sequence is shown, just reminds me of the recent James Bond flick. Hope Baradhwaj has done a decent job atleast to match up to the roaring visuals. On the other hand, re-recording work is impressive. Engine sounds, Looks like Baradhwaj has taken extra care in producing minor sounds, i.e knife part.

    2. Trailer carries a few 'gethu' walks of our Thala. Eventhough it will be cherished for sure by fans, hopefully the director would have not overdone it.

    3. There shouldn't be any room for "all style no substance" kind of statements.

    4. To me, the whole trailer and movie would have been in a different level had it been scored by Yuvan. Atleast they could have oursourced the background score to Yuvan. Nevertheless, hope for the best and lets wish the whole product to be a winner just like our Billa.

    5. Last but not least, as we observe closely, there is not a single scene where Ajith smiles. Looks like Aasal won't have the jovial Ajith we knew. Atleast in Billa, the Velu character provides the jovial and charming elements. It is totally missing here. I will be extremely happy if the movie prove me wrong.

    Overall, I suppose each and every fan of our "Ultimate Star", oops, 'Thala' Ajith will satisfy by the trailer. I have regained my confidence (a little bit ;p) I lost before due to Saran. I'm pretty sure Thala will be delight to watch on big screen after almost one year and a half. 10 more days to go and 'Thala' countdown begins...
    Praying the Almighty...

    Wednesday, January 6, 2010

    Aasal Songs - My Review

    Aasal - Thala Pola Varuma
    Singer: Sunitha Menon


    Seems to be like an intro song. Probably, this is the first intro song ever rendered by female voice for a top hero. I have always wanted this 'Thala Pola Varuma' bit to be reused by ARRahman whenever Ajith-ARR combo happens. Looks like Bharadwaj heard my prayers first. The bit reused and it's sure to be cherished by Ajithfans.
    Sunitha's voice is catchy but shadowed by the music. I can hardly catch the lyrics most of the times. I would be happy if this song comes in background with 'Thala' Ajith performs daredevil stunts or encounters his enemies as in Karka Karka from Vettayadu Vilayadu.

    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    Em Thandhai
    Singer: Bharadwaj


    One could instantly fell in love with this situational pathos number. It seems this song is a dedication to our late Nadigar Thilagam Sivaji Ganesan. Yes, indeed it brings the Thespian in front of eyes while listening with closed eyes. The lyrics are just too powerful. There are quite a number of songs specifically dedicated for Mothers. There are two songs from our 'Taala' Ajith himself - Uyirum Neeye from Uyirodu Uyiraga and Theeyil Vizhuntha from Varalaru. With Vairamuthu sir at his best in penning the lyrics, this song just a perfect dedication to all Fathers. Music is quite soft/pleasing and very soothing.

    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    Kuthiraiku Theriyum
    Singer: Surumukhi, Sricharan


    This track is pretty ordinary eventhough both the singers are at their best. The rap bit is quite good but it fails to impress as a whole. Perhaps, I need more hearings. Guess, it fits for Sameera pretty well.

    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    Tottodaing
    Singer: Mukesh, Janani


    Travels in a fast beat all the way. The word 'Tottodaing' will surely becomes popular after this. One needs a couple of hearings to actually like this song.

    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    Dushyantha
    Singer: Surumukhi, Kumaran


    The beat pretty much resembles 'Yesh Ishq' from Jab We Met which is again a lift from a French song. Without much complain on that, this is an instantly likeable track. Very catchy. My all time favourite, a song from MSV-Sivaji combo that rocks even today, 'Partha Nyabagam Illayo' - reused by just lending about four lines of lyrics.
    The songs starts with the tune 'Partha Nyabagam Illayo' but sooner lifts and stays as the French song beat till the end. Bharadwaj pretty careful in not spoiling the classic and he succeeded too.
    The insertion of the lyrics from the classic song is just too good. Most importantly, the classic lyrics sync perfectly which just shows one thing - MSV's tunes are evergreen.
    Both singers need special mention, especially the female singer. Fresh voice. The part where she sings the old song's lyrics is just too perfect and mesmerizing. I'm quite confident that this song will go well with public especially kids.

    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    Yengey Yengey
    Singer: SPB


    This track brings back the old Bharadwaj we knew. Heavy guitar usage thoughout the song with fast beats. Reminds me of the last heavy beat from 'Sontha Kuralil Paada' from Amarkalam. I need not tell about SPB who is like the soul for this track. As an Ajithfan, I just need SPB in every album of 'Thala' Ajith's, singing atleast one song. From audio release speech, I got to know that this is indeed 'Thala' Ajith's favourite song since it's about hurdles/back-stabbing/insults a man had to face. Once again, cheers to Vairamuthu sir for penning such a touchy, yet truthful lyrics that resembles my hero's both personal and cinema life. Ajith could relate to it very well which is the obvious reason to why it becomes his favourite from the album. From now on, it's my favourite too.

    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    Yengey Yengey
    Singer: Karthikeyan, Chorus


    Totally, overshadowed by the SPB version. But, the beat in this is just the opposite. Quite slow and perhaps, it might indicate tragedy or sorrow in the movie. Definately, listenable. Both the version will be remembered by Ajithfans for a long time.

    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    As a whole, Bharadwaj dissapoints fans who expected a 'Kadhal Mannan' or 'Amarkalam' kind of albums. The first hearing fails to impress but a couple of hearings might make one to find this album is actually quite decent and entertaining.
    The music director has came out from his typical 'melodious' image and explored a lot. Orchestration and music arrangement are remarkable and striking.

    My Rating: 2.5/5

    Tuesday, February 24, 2009

    Ideal Couple - Ajith & Shalini

    Ajith Kumar who is also called as 'Thala' affectionately by his beloved fans is one of the big names to reckon with in Kollywood.





    Shalini was an actress from her childhood days who had almost 97 movies to her kitty.






    It was 1999 and a memorable year for the couple. During the shooting of Amarkalam directed by his friend SARAN, Ajith fell in love with the co actress Shalini.




    They got married in 2000 in Chennai, where they invited many other Kollywood actors and actresses including Rajnikanth, Kamal Haasan, Vijay, Surya and R. Madhavan. As both were of different religions, Ajith being a Hindu and Shalini being Catholic, they were married together under the customs of both religions.


    After their marriage in the year 2000, Shalini retired as an actress and became a full time housewife. However she did accompany Ajith to the sets of his films as moral support.




    On January 3, 2008, the couple were blessed with a baby girl, Anoushka Kumar.





    Ajith – Shalini love and marriage was one of the most talked about news over the period and the star couple are still known for their love and affection for each other.