Friday, August 27, 2010

மங்காத்தா - உள்ளே வெளியே... ஆட்டம் ஆரம்பம்

கடந்த 20-ஆம் தேதியில், நான் மகான் அல்ல படம் வெளிவந்தது அனைவரும் அறிந்ததே. நீண்ட நாட்களுக்குப் பின், அஜித் ரசிகர்கள் அன்று மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியிருந்தனர். இப்படத்துடன் தல அஜித்தின் ஐம்பதாவது படமான மங்காத்தா பட 'டீசரும்' வெளியிடப்பட்டதே அதற்கு காரணம். ஒரே தயாரிப்பாளர் இவ்விரு படங்களையும் தயாரித்ததால்/தயாரிப்பதால் இப்படி ஒரு ஏற்பாடு. என்ன தான் சிலர் ஏற்க மறுத்தாலும், நான் மகான் அல்ல படத்தின் பெரிய 'ஒபெனிங்கிற்கு' மங்கத்தா 'டீசரும்' ஒரு முக்கியக் காரணம் என்பது அசைக்க முடியாத உண்மை. பல இணைய தளங்கள் இதனைப் பற்றி குறிப்பிட்டிருந்தாலும், ஒரு சிலர் அதனை நம்பாத மாதிரி நாடகம் ஆடுவதைக் கண்டால் சிரிப்பாக வருகிறது. சரி, வழக்கம் போல அந்த மகான்களை 'சீரியஸாக' எடுக்காமல் 'டீசருக்கு' வருவோம்.


சுமார் ஒரு நிமிடம் ஒன்பது வினாடிகள் பயணிக்கும் இந்த 'டீசர்', கருப்பு வெள்ளை தொனியில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் வேறு எந்த துணை நடிகர்களும் இல்லை, அஜித் மட்டும் தான். கருப்பு கண்ணாடி அணிந்து, துப்பாக்கியை சரி செய்தவாறு, 'மங்காத்தா டா' என்று வசனம் பேசுகிறார். பின்னனி இசையைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். யுவனின் உழைப்பு நன்கு தெரிகிறது. 'வெஸ்டர்ன் கிலாஸிக்கல்' (Western Classical) இசையைப் பயன்படுத்தியிருக்கிறார். சீரியசாக காண்பிக்கப் படும் 'டீசரை', தன் பின்னனி இசையின் மூலம் ஒரு ஜாலியான உணர்விறகு மாற்றியிருக்க்கிறார் என‌லாம். படம் முழுக்க இவரின் பாடல்களும் பின்னனி இசையும் எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளது.

'டீசர்' பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும், அது மீண்டும் கண்ணாடி, துப்பாக்கி என்று முந்தைய மூன்று படங்களான பில்லா, ஏகன், அசலின் சாயலை நினைவூட்டுவதைத் தவிர்க்க முடியவில்லை. கொஞ்ச நாளைக்கு கண்ணாடி, துப்பாக்கி, கோர்ட் உடை போன்றவற்றை அஜித் தவிர்க்க வேண்டும் என்று ரசிகர்களில் ஒரு பகுதியினர் சகித்துக் கொள்கின்றனர். அவர்களில் நானும் ஒருவன்.


இப்படி தான் படம் இருக்கப் போகிறது என்று ஒரு அறிமுகம் செய்யவே இது முனைகிறது. என்னால் இந்த டீசரை வைத்து எந்த ஒரு முடிவிற்கும் வர இயலவில்லை. டீசர் என்றாலே ஒரு கிண்டலுக்காக எடுக்கப்படும் குறும்படம் என்பார்கள். இயக்குணர் வெங்கட் பிரபுவும் இதையே சொல்லியிருக்கிறார். முந்தைய படங்களின் சாயல் கொண்டே அஜித்தைக் காண்பித்து ரசிகர்களைக் கிண்டலும் கேலியும் பண்ணியிருப்பதாகவும், கவலை வேண்டாம், படம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என்றும் முகப்புத்தகத்தில் தெரிவித்திருக்கிறார். பார்ப்போம்.

அஜித, வெங்கட் பிரபு, யுவன் மற்றும் மங்காத்தா படத்தில் பணி புரியும் அனைவருக்கும் 'ஆல் தி பெஸ்ட்'...
மங்காத்தா பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்... :)

Tuesday, August 3, 2010

அஜித் - பதினெட்டு வருட திரைப் பயணம்...

பதினெட்டு வருடங்களுக்கு முன்பு, இதே நாள் (ஆகஸ்டு 3, 1992), ஒரு இளம் வாலிபர் 'பிரேம புஷ்த‌கம்' எனும் ஒரு தெலுங்கு படத்தின் படபிடிப்பில் தன் சினிமா வாழ்க்கையைத் துவங்கினார்.

தமிழ் சினிமா என்னவென்று துளியும் அறிந்திறாத‌ அந்த இளைஞர், தன் சொந்த கஷ்டங்களைப் போக்கும் வகையில் பணத்திற்க்காக சினிமா துறையைத் தேர்ந்தெடுக்கலானார்.

பொதுவாக அரசியல் ஒரு சாக்கடை என்பார்கள். ஒரு வேளை, அரசியல் கலந்த இந்த தமிழ் சினிமாவும் ஒரு சாக்கடையே என்று தெரிந்திருந்தால் அந்த இளைஞர் தன் திசையை மாற்றியிருக்கலாம். என்ன செய்வது, அதனைப் பற்றி அவருக்கு பாடம் புகட்ட ஒரு ஆசிரியர் இல்லாமல் போனது அவ‌ரது துரதிஷ்டம்.


யாரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன் என்பது தெரிந்திருக்கும். தல அஜித் தமிழ் சினிமாவிற்குள் புகுந்து பதினெட்டு வருடங்கள் உருண்டோடிவிட்டன. ஒன்றா இரண்டா, பதினெட்டு வருடங்கள். ஒவ்வொறு கட்டங்களிலும் அவர் எதிர்நோக்கிய கஷ்டங்கள் எண்ணிலடங்காதது. எத்தனை இன்பம், எத்தனை துன்பம், சோதனைகள், தடைகள், கட்டுப்பாடுகள், அனாவசிய பிரச்சனைகள் என அவர் சந்தித்த விஷயங்கள் அவருக்கு நெருக்கமானவர்கள் அறிந்ததே.

குழந்தைகளின் கைகளைப் பிடித்து நடை பழகிவிடுவார்களே, அது போல இவருக்கு பக்கபலமாக இருக்க யாரும் முன்வரவில்லை. தனியாக போராடினார். அதனால், வெற்றிகளோடு சேர்ந்து சறுக்கல்களையும் எதிர்நோக்கினார். இவரது வெற்றிகளைக் கொண்டாடிய பலர் இவரது கஷ்ட காலத்தில் துணை வராதது வேதணைக்குரியது. அதனால் என்ன, தனது சொந்த அனுபவத்தில் தன்னை மேலும் வலுப்படுத்திக் கொண்டார்.

யாரையும் மிக எளிதாக நம்பிவிடுவார். இவரது இந்த பலவீணத்தை பலர் பல வேளைகளில் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். இவருக்கு எதிரிகளை விட துரோகிகள் தான் அதிகம் என்று புதிதாய் சினிமாவில் புகும் யாரும் சொல்லி விடுவர். தன் முதுகைக் குத்திக் கிழித்தவர்களின் மூலம் இவர் அடைந்த ஒரே பயன், இப்போது நாம் ஒரு பக்குவமான அஜித்தைப் பார்ப்பது தான்.


எந்த‌வொறு பிண்ன‌னியும் இல்லாத‌ இவ‌ர், த‌ன‌க்கென்று ஒரு த‌னி சாம்ராஜிய‌த்தையே உண்டு ப‌ண்ணினார். ர‌சிக‌ர் ம‌ன்றங்கள் எண்ணிக்கையும் இவர‌து ஒவ்வொறு பட ரிலீசின் போது கிடைக்கும் வரவேற்பும் ('ஒபெனிங்') இதற்கு சான்றுகள். என்ன தான் இவருக்கு 'காட்ஃபாதர்' இல்லையென்றாலும் என்னைப் போன்ற‌ பல ரசிகர்களுக்கு இன்று இவர் தான் 'காட்ஃபாதர்', முன்னோடி, 'ரோல்மாடல்' எல்லாம்.

தல, இந்த அகம்பாவம், ஆனவம், துரோகிகள் சூழ்ந்த தமிழ் சினிமாவில் பதினெட்டு வருடங்கள் பயணித்துவிட்டீர்கள். இன்னமும் பல ஆண்டுகள் கடக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்.

கப்பல் இல்லாத துறைமுகமா, தல அஜித் இல்லாத தமிழ் திரையுலகமா...