Tuesday, April 27, 2010

நடந்ததெல்லாம் நன்மைக்கே...

இன்றைய நாள் எனக்கு சரியாக போகவில்லை. காலையில் எழுந்தவுடன் கண்ணாடியைப் பார்த்து விட்டேனோ என்று ஞாபகப் படுத்த முயல்கிறேன். முடியவில்லை.

காட்சி 1:


காலையிலிருந்து முகம் தெரியாத நபரிடம் இருந்து குறுஞ்செய்திகள் வந்த வண்ணமாகவே இருகின்றது. அவள் என்னை காதல் செய்கிறாளாம். இதில் என்ன வேடிக்கை என்றால் என்னை அவளுக்கு மிக நன்றாக தெரியும் என சொல்கிறாள். அதே சமயம், எனக்கும் அவளை நன்றாகத் தெரியும் என்கிறாள். சொன்னா நம்புங்க, எனக்கு பெண் நண்பர்கள் மிகக் குறைவு. சிறு வயதிலிருந்தே என் வகுப்பறையில் சேர்ந்து படித்த மாணவிகளுடன் கூட பேச மாட்டேன். மின்னலே 'மேடி' சொல்வது போல 'எனக்கு இந்த பொண்ணுகனாளே ஒரே அலர்ஜி. அவங்களுக்காக டைம் வேஸ்ட் பண்றது மணி வேஸ்ட் பண்றது எல்லாம் பிடிக்காது', நான் இந்த ரகம். அது மட்டும் இல்லாமல் my kind of girl-ஐ நான் இன்னும் பார்க்கவில்லை.

இந்த சதிகாரி என் பெயர், நான் வசிக்குமிடம் அத்தனையும் சரியாக சொல்கிறாள். நான் பல முறை கேட்டுப் பார்த்தும் அவளது அடையாளத்தை வெளிபடுத்த மறுத்தாள். உண்மையிலேயே, இதனால் எனக்கு இன்று வேலையே ஓடவில்லை (மனசாட்சி: இல்லைனாலும்). என்னையும் ஒரு பெண் விரும்புகிறாள் என்று நினைக்கையில் 'காலரைத்' தூக்கி பெருமிதம் கொள்கின்றேன். அதே வேளையில், இது உண்மை எனும் பட்சத்தில் இப்படியும் ஒரு பேண்ணா என கவலையாக உள்ளது. இன்னும் சொல்லப் போனால் அருவருப்பாக உள்ளது. காரணம், நீங்கள் அவளது குறுஞ்செய்திகளை வாசித்திருக்க வேண்டும். கௌதம் மேனன் படம் அதிகம் பார்ப்பாள் போலும். இதோ உங்களுக்காக சில:

  • Hello darling, Miss you so much dear. i wish u are with me now so that I can kis you deep.

  • Ok la. I want to be frank with you. I want you to be my boyfriend. Can or not?

  • I want to have a romantic dinner with you and make love to you.

  • Yes, Yoga darling. I know you and love you very much.

  • You light up my life, you give me hope.


  • நான் எவ்வளவோ கெஞ்சி கடைசியில் ஒரு வழியாய் அவள் பெயரை மட்டும் சொன்னாள், ராஜ் என. இது ஆண் பெயரல்லவா.

    ஒரு வேளை இது ஒரு ஆணாக இருந்து, நான் ஒரு பெண் என எண்ணி இந்த கவலைக்கிடிமான சூழ்நிலைக்கு தள்ளப்படேனோ...
    ஒரு வேளை நிஜமாலுமே எனக்கு இப்படி ஒரு 'secret admirer' இருப்பாளோ...
    ஒரு வேளை எனது நண்பர்களில் யாரோ ஒருவர் இப்படி என்னிடம் விளையாடுகிறார்களோ...
    ஒரு வேளை நான் 'gay' என்று இவன் நினைத்திருப்பானோ...

    இப்படி பல 'ஒரு வேளைகள்'...

    காட்சி 2:


    அடுத்து, முகப்புத்தகத்தில் (Facebook) ஒருவரிடம் வாக்குவாதம் ஏற்பட்டது. சின்ன விசயம் தான். அவர் ஒரு சூர்யா ரசிகன். வழக்கம் போல சூர்யாவின் வீடியோ ஒன்றைப் பற்றிய விவாதம் ஏற்பட, அதற்கு நான் அண்ணன் காவுண்டமணியின் பாணியில் ஒரு கருத்து சொன்னேன். அதற்கு அந்த நபர் தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் உளறினார். ஆதலால், அவருக்கு பதில் கூறாமல் நான் புறக்கணித்தேன். என்ன நினைத்தார் என தெரியவில்லை. தனி மடலில் (chat) நான் ஏன் அவருக்கு பதில் சொல்லவில்லை என கேள்வி எழுப்பினார். அவருக்கு கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என வற்புருத்தினார்; எச்சரிக்கைக் கூட செய்தார். நேரம் ஆக ஆக அவரது பேச்சு அனாவசியமாகத் தெரிந்தது. அந்த விசயத்திலிருந்து வெளிவந்து தனிப்பட்ட முறையில் என்னைத் தாக்கினார் (personal attack). நம் பொருமைக்கும் ஒரு எல்லை இருக்கும் அல்லவா. கடும் சினம் எனக்கு. அவருடன் மேற்கொண்டு பேசாமல் அவரது ஃப்ரோபைளை துண்டித்தேன் (disconected his profile).

    மீண்டும் அவர் எனக்கு நண்பராக அழைப்பிதழ் விடுத்தார். சற்று கோவம் தெளிந்த நான் அதனை எற்றுக் கொண்டேன். தன் செயலை எண்ணி பல முறை மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். தொலைப்பேசி எண்களைக் கூட பரிமாறிக் கொண்டோம். மன்னிப்பு கேட்குறவன் பெரிய மனுசன், மன்னிகிறவன் அதை விட பெரிய மனுசன் என விருமாண்டி கமல் சொன்னது போல நான் பெரிய மனுசனாகி அவரை மன்னித்து விட்டேன்.

    காட்சி 3:


    நளை அதிகாலை எனக்கு பிடித்த Barcelona அணி Inter Milan அணியை அரை இறுதி இரண்டாம் சுற்றில் சந்திக்கவிருக்கிறது. முதல் சுற்றில் Inter Milan மூன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வென்றது. எனவே, நாளை விடியற்காலை நடக்கவிருக்கும் போட்டுயில் இரண்டுக்கு சூழியம் என்ற கோல் கணக்கில் Inter Milan-ஐ தோற்கடித்தால் இறுதிச் சுற்றுக்கு எனது அணி தகுதி பெறும். அது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. எது எப்படியோ, இந்த போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என நம்புகின்றேன். காலையிலிருந்து இதை நினைத்துக் கொள்ளுகையில் ஒரு அச்சம் மனதில் இருந்து தொலைக்கிறது. இதில் Barcelona அணி கண்டிப்பாக ஜெயித்து இறுதி சுற்றிலும் வெற்றி வாகை சூடி, தனது கடந்த ஆண்டின் வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள இறைவணை வேண்டுகிறேன். எனக்காக நீங்களும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.


    ஒரே நாளில் எத்தனை எண்ணங்கள், சங்கடங்கள் மற்றும் புது புது அனுபவங்கள். நம்மைச் சுற்றி நடக்கும் எல்லா விசயங்களும் நன்மைகே என எண்ணி, அதில் நல்லதைப் பிழிந்து கெட்டதை அகற்றுவோமானால் சீருடன் வாழலாம். சில மாதங்கள் கழித்து, இதனை மீண்டும் படிக்கையில் கண்டிப்பாக சிரித்துக் கொள்வேன் என்பது உறுதி.

    பி.கு நான் எழுதி சில நட்கள் ஆகிற்று. அதான் இந்த மொக்கை பதிவின் காரணம்.

    Monday, April 19, 2010

    'ரேனிகுண்டா' எனது பார்வையில்...


    ஒரு சாதாரண 'மிடல் கிளாஸ்' குடும்பத்தில் பிறந்தவன் கதையின் நாயகன், சக்தி. இவனை எப்படியாவது ஒரு பொறியியல் வல்லுனராக ஆக்கிவிடுவது என்பது இவனது தந்தையின் கனவு. ஆனால், இவனுக்கோ படிப்பு வரவில்லை. அதட்டும் அப்பாவாக இல்லாமல், மகனால் என்ன முடியுமோ, அதைச் செய்யட்டும் என மனதைத் தேற்றிக் கொள்ளும் அன்பான அப்பா, கண்டிப்பான அம்மா என சக்தியின் குடும்பம் இன்பத்தில் மிதக்கின்றது.

    ஒரு நாள், சக்தியின் கண் முன்னே, தனது பெற்றோர்கள் கொடூரமாகக் கொல்லப் படுகின்றனர். சக்தியின் அப்பா, தன் நண்பர் படுகொலைச் செய்யப் பட்டதைக் கண்ணால் பார்த்த ஒரே சாட்சி. கொலையாலி (கதிர்) பல முறை மிரட்டிப் பார்த்தும், இவர் மசியவில்லை. ஊரே வேடிக்கைப் பார்க்க சக்தியின் தாய் தந்தையினர் அழிக்கப் படுகின்றனர்.

    ஒரே நாளில், தன் வாழ்க்கை இருண்டு போய்விட்டதே என துவண்டு கிடந்த கதையின் நாயகன், தன் பழியைத் தீர்க்க முற்படுகிறான். ஆத்திரமும் பழி வாங்கும் எண்ணமும் மட்டும் இருந்தால் போதுமா? தைரியம் இல்லாமல், கத்தியைத் தூக்கிக் கொண்டு கதிர் முன் நிற்க, அடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கப் படுகிறான். பதினான்கு நாட்கள் சிறையில் அடைக்க தீர்ப்பு வழங்கப் படுகிறது.

    கூட்ச சுபாவம் நிறைந்த சக்திக்கு, ஜெயிலர்கள் மூலம் பல அவதூறுகள். அடி, உதை என பத்தொண்பது வயதில் தாங்கிக் கொள்ள முடியாத கொடுமைகளை எதிர் நோக்க வேண்டிய கட்டாயம். அங்கு தான் அந்த நான்கு பேரையும் முதன் முதலாக சந்திக்கிறான். அவர்களுக்கு வயது பத்தோண்பதிலிருந்து இருபத்து நான்கு வரை தான், ஆனால் ஒவ்வொருவர் மேலும் பல வழக்குகள். சிறையினுள்ளே இவர்கள் வைத்தது தான் சட்டம். ஜெயிலர்களுக்கு கூட இவர்களின் மேல் ஒரு அச்சம் இருக்கும். அடி, மிதிபடும் சக்தியின் மேல் ஒரு கருனை பிறக்கிறது இவர்களுக்கு, தங்கள் வசம் வைத்து அடைக்கலம் கொடுக்கின்றனர். சக்தியும் வேரு வழியில்லாமல், ஜெயிலர்களின் கொடுமையிலிருந்து தப்பிக்க அந்த கூட்டத்தில் ஒருவனாக சேர்கிறான். சிறையிலிருந்து தப்பிக்கும் போது, அவர்கள் சக்தியையும் உடன் அழைத்துச் செல்கின்றனர்.


    சக்தியின் பெற்றோரின் படுகொலையை அறிந்து கொண்ட அவர்கள், அந்த கொலையாலி கதிரைத் தீர்த்துக் கட்ட உதவுகின்றனர். அதன் பிறகு, காவல் துறையின் கண்களில் மண்ணைத் தூவும் விதத்தில், மும்பைக்கு ஒரு இரயிலின் மூலம் பயணம். சந்தர்ப்ப சூழ்நிலை, ரேனிகுண்டாவில் இறங்கி அங்கு ஒரு குண்டர் கும்பலின் சகவாசம் இவர்களுக்கு ஏற்படுகிறது. ரேனிகுண்டாவில் சக்தி ஒரு பெண்ணைப் பார்க்கையில் இருவருக்கும் காதல் மலர்கிறது. கதானாயகிக்கு பேச்சும் வராது, காதும் கேட்காது என்பது குறிப்பிடத்தக்கது. தன் நண்பர்களின் தூண்டுதலுகினங்க சக்தி தன் காதலியுடன் எங்கேயாவது சென்று ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ முடிவெடுக்கிறான்.

    இதற்கிடையே, ஒரு பெரும்புள்ளியைப் போட்டுத் தள்ள அந்த குண்டர் கும்பலால் இவர்கள் துண்டப் படுகிறார்கள். அந்த முயற்சி தோல்வியடைய, நண்பர்களில் ஒருவன் (பெயர் பாண்டு, இவன் தான் தலைவன் போலும்) அந்த இடத்திலேயே அடித்துக் கொல்லப் படுகிறான். பல நாட்களாக இவர்களைத் தேடிக் கொண்டிருக்கும் காவல் துறையினரோ எப்படியோ ரேனிகுண்டாவை வந்தடைகின்றனர். என்னதான் இவர்கள் பல சட்ட விரோத காரியங்களில் ஈடுபட்டவர்கள் என்றாலும், ஒவ்வொருத்தராக காவல் துறையின் துப்பாக்கிக்கு பலியாகும் போது ஒரு பரிதாபம் ஏற்படுவது உண்மை. இறுதியில் அனைவரும் சுட்டுத் தள்ளப் படுகின்றனர், சக்தியைத் தவிர. காவல் துறையினர் ஒரு புறம் தீவிரமாகத் தேட, சக்தி அவர்களிடமிருந்து தப்பித்தானா, தன் காதலியுடன் ஒன்று சேர்ந்தானா என்பது மீதி கதை, அதாவது 'க்லைமாக்ஸ்'.

    மிகவும் விருவிருப்பான திரைக்கதை படத்தைத் தாங்கிப் பிடிக்கின்றது. நகைச்சுவை, காதல், நட்பு, பாசம் என எல்லா அம்சங்களும் போதுமான சம அளயில் தெலிக்கப்பட்டுள்ளது. வசனகர்த்தாவை பாராட்டியே தீர வேண்டும். என்ன ஒரு இயல்பான வசனங்கள். நண்பர்கள் ஜெயிலர்களிடம் பேசும் கிண்டல் கலந்த வசனங்கள் மற்றும் மது அருந்தும் போது தங்களுக்கிடையே பேசும் பேச்சுகள் அனைத்தும் ரசிக்க வைக்கின்றன; வசனகர்த்தா தணித்து நிற்கிறார்.


    நண்பர்களில் ஒருவன் ஜெயிலரிடம், "போய், சாம்பாருக்கு உப்பு இருக்கா பாருங்க", என்பதாகட்டும், மற்றொரு (வயதான) ஜெயிலரைப் பார்த்து பயந்த சக்தியிடம், 'இந்த ஆளுக்கா பயந்தே, இந்தாளுக்கெல்லாம் பயப்படாத' என்ற காட்சியாகட்டும், அதே ஜெயிலர் அறிவுரைக் கூறும்போது தெனாவட்டாக பதில் சொல்லும் காட்சியாகட்டும், திரையில் மிக துள்ளியமாக வளம் வந்து மனதில் நிற்கும் காட்சிகள் அவை. இயக்குணர் பண்ணீர்செல்வத்தின் முதல் படம் என நினைக்கிறேன். அசத்தியிருக்கார், இவருக்கு ஒரு சல்யூட். பிண்ணனி இசையும் பாடல்களும் படத்தோடு ஒன்றி வருகின்றன. நாயகனுக்கும் நாயகிக்கும் ஏற்படும் காதல் கனங்கள் மழையின் பிண்ணனியில் அழகாக ஒரு பாடலில் மூலம் காண்பிக்கப்படுகின்றது. அப்பாடலும் சரி, ஒளிப்பதிவும் சரி நினைவில் நிற்கின்றது.

  • எனக்கு பிடித்த விசயம்


  • அவர்கள் நால்வரும் குற்றவாளிகள் தான். ஆனால், அவர்களுக்கும் ஒரு கருணை குணம் உள்ளதை கதை மிக அழகாக சொல்கிறது. தாங்கள் தான் சீரழிந்து விட்டார்கள், நண்பனாவது (சக்தி) தன் காதலில் ஜெயித்து ஒரு நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என ஆசைப்படும்போது இவர்களது நட்புணர்வு மெய்சிலிர்க்க வைக்கின்றது. இன்றைய தேதியில் இப்படி பட்ட நண்பர்கள் (அதாவது குற்றவாளிகளாக இருந்து) தங்கள் நண்பர்களும் தங்களோடு சீரழிந்து போக வேண்டும் என தான் விரும்புவர். சக்தியின் காதலுக்காகவும் நல்ல வாழ்க்கைக்காகவும் மெனக்கெடும் அந்த நால்வரின் நல்லெண்ணமும் நட்பும் என்னை வெகுவாக கவர்ந்தது; பாராட்டக்கூடியது.

  • எனக்கு பிடிக்காத விசயம்


  • இது போன்ற படங்களின் அதிகரிப்பு நமது சமுதாயம் இன்னும் சீர்குலைய வழி வகுக்கின்றது. முன்பே சொன்னது போல, ஜெயிலர் ஒருவர் இவர்களுக்கு புத்திமதி சொல்லப் போய், அதற்கு இவர்களில் ஒருவனின் எகத்தாளம், தெனாவட்டு கலந்த பதில்களை நீங்கள் கேட்க வேண்டும். நல்லவனைக் கூட பணத்திற்க்காக குறுக்கு வழியில் இட்டுச் செல்லும் கூர்மையான சொற்கள் அவை. இதோ உங்களுக்காக:

    ஜெயிலர்: ஏண்டா, இந்த வயசுல தலைக்கு பத்து பத்து கேசு வச்சுருக்கீங்கலே. உங்க வாழ்க்கை எல்லாம் என்னடா ஆகுறது? ஒரு வேலை வெட்டி பார்த்து பிழைக்கக் கூடாதா?

    ஒருவன்: வேலை வெட்டிக்கு போயி, இன்னா சம்பாரிக்க போறோம்? உனக்கென்ன சம்பலம்? மாசம் ஃபுள்ளா உள்ள சுத்துனா ஒரு ஏழாயிரம் ருவா தருவாய்ங்களா? நாங்க ஒன்னு பண்ணா போதும் பத்தாயிரம் ரூவாய்க்கு மேலலாம் வாங்கிருக்கோம். தெரியும்ல...

    ஜெயிலர்: எண்டா, காசு பணத்துக்காக ஒரு உயிரை பதபதைக்க கொல்லுறீங்களே... பாவம் இல்லையாடா?

    ஒருவன்: ஞாயித்துக் கெழமையானா, கறி தின்னுறதுக்கு நீ ஆடு கோழி அருக்குறது இல்லையா, அந்த மாதிரி தான். பணத்த விடு ஏட்டைய்யா, ஆளை பார்த்தா ஒரு பயம் வர வேண்டாமா...
    நேத்து அந்த பயல போட்டு (சக்தியை) அந்த அடி அடிச்சாங்களே, யாராவது கேட்டீங்களா? என்ன அடிக்க சொல்லுங்க பார்க்கலாம். சும்மா ஒரு அடி அடிக்க சொல்லுங்களேன் பார்க்கலாம். நீ பீ.சி தானே, கைல லத்தி வச்சுருகேல்லே... எங்க ஒரு அடி அடி பார்க்கலாம். சும்மா ஒரு அடி அடி பார்க்கலாம். எங்க போனாலும் சரி, எத்தன வருஷம் ஆனாலும் சரி, தேடி வந்து சங்க அறுப்போம்ல... சும்மா வருமா பயம்... நாலஞ்சு பண்ணா தான்னுய்யா பயப்படுறீங்க. கெளம்பு கெளம்பு. டெண்சன கெளப்பாதீங்கய்யா போய்யா... போ போ கெளம்பு...


    ஜெயிலர்: தலை எழுத்து டா...

    அதற்காக, இன்றைய சமுதாயத்தாய இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்கிறார்கள் என சொல்லவில்லை. இது போன்ற வசனங்கள் கலந்த படங்கள் இவர்களுக்கு குண்டர் கும்பல், அயோக்கியத்தணம் போன்ற சட்ட விரோத செயல்களில் இறங்க ஒரு ஊக்குவிப்பாக அமைகிறது என்பதே எனது ஆதங்கம்.

    Tuesday, April 13, 2010

    மற்றுமொரு ஆண்டு இனிதே துவங்குகிறது...

    என் இனிய தமிழர்களே...
    நான் சம்பாதித்த அன்பான ஃபோளோவர்களே...

    எனது பதிவுகளுக்கு தமிலிஷில் வாக்களிக்கும் துறவிகளே...
    தொடர்ந்து ஆதரவை அள்ளித் தெளிக்கும் நல்ல உள்ளங்களே...

    எல்லா பதிவுகளையும் படித்து மனம் நொந்து போகும் ஜீவன்களே...
    ஒவ்வொரு பதிவிற்கும் மறவாமல் காமேண்ட் போடும் வாசகர்களே...

    மொக்கையாக இருந்தாலும் நல்ல பதிவு என வாழ்த்தும் மகான்களே...
    பதிவுகளை படித்துவிட்டு காமெண்ட் போடாமல் எஸ்கேப் ஆபவர்களே...

    மற்றும் எனது நலம் விரும்பிகளே, நண்பர்களே, எதிரிகளே, துரோகிகளே, குழந்தைகளே, சிறுவர்களே, முதியோர்களே, தாய்மார்களே, இளஞ் சிட்டுகளே, ஆண் சிங்கங்களே, மாணவ மணிகளே...


    உங்கள் அனைவருக்கும் என் இனிய மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். எதிர்வரும் ஆண்டு நம் எல்லோருக்கும் சிறப்பான வெற்றிகரமான செழிப்பான வண்ணங்கள் நிறைந்த ஆண்டாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கின்றேன்.

    எதிர்வரும் ஆண்டை இருகரம் நீட்டி வரவேற்போமாக. அடுத்த வருடம் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.

    நன்றி வணக்கம்.

    __/\__ இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க __/\__

    "தமிழன் என்று சொல்லடா 'தல' நிமிர்ந்து நில்லடா..."

    என்றென்றும் உங்கள் நல்லாசியை நாடும்,
    நா.யோகநாதன் AKA தலபேன்ஸ் :)

    Saturday, April 10, 2010

    'அங்காடித்தெரு' எனது பார்வையில்...

    அன்றாட வாழ்க்கையில் எத்தனைக் கூலித் தொழிலாளர்களைச் சந்திக்கிறோம்? உணவுத் தளங்களில் சாப்பாடு பரிமாறுபவர்கள், கார்களுக்கு 'பெட்ரோல்' போடும் சிருவர்கள், வாகன பழுதுபார்க்கும் நிலையங்களில் வேலை செய்யும் இளைஞர்கள் என நம்மைச் சுற்றி அடுத்த வேளை சாப்பாட்டிற்கு மெழுகுவர்த்தியாய் தம்மை உருக்கிக் கொள்ளும் எத்தனை மனிதர்கள். இவர்களை எப்படி எல்லாம் கேவலமாக பார்த்துள்ளோம், நடத்தியுள்ளோம், என ஒரு முறை யோசித்துப் பாருங்கள். அவர்களும் நம்மைப் போன்ற சராசரி மனிதர்களே, அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை உள்ளது; அது இன்பம், சோகம், கோபம், கண்ணீர் கலந்தது என பார்வையாளர்களைத் தலை உயர்த்தி பார்க்கத் தூண்டும் ஒரு படம் தான் இந்த அங்காடித்தெரு.


    துணிகள், சீலைகள் போன்றவை விற்க்கப்படும் அங்காடிகளில் வேலைப் பார்க்கும் பணியாளர்களின் அன்றாட வாழ்க்கையை திறம்படச் சொல்லியிருக்கின்றது இப்படம். வருமைக் கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்ட இளைஞர்கள் திருநெல்வேலிப் பக்கத்திலிருந்து கொண்டு வரப்படுகின்றனர். இவர்கள் காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுக்கப் போகும் வரை கொத்தடிமைகள் போல நடத்தப்படுகிறார்கள். இவர்களுக்குள் ஏற்படும் காதல், விருப்பு வெறுப்பு, சகிப்புத்தன்மை என எல்லாவற்றையும் காண்பித்திருக்கிறார்கள். அகதிக்குச் சமமான வாழ்க்கையை சகித்துக் கொண்டு எப்படி எல்லாம் இந்த இளைஞர்கள் காலத்தைப் போக்க வேண்டியிருக்கிறது என படம் நகர்கிறது.

    காதல், நட்பு, வேலை, பணிபுரியுமிடம், முதலாலிகள் கொடுமை என வழக்கமாக தமிழில் காட்டப்படும் சமாச்சாரம் தான். ஆயினும், அதனைக் கையாண்ட விதமும் அதை கண்முண்ணே கொண்டு வந்த திரைக்கதையும் அருமை. தங்க இடம், உன்ன உணவு என அடிப்படைத் தேவைகளை அளித்து வேலையும் கொடுப்பதாக மார்தட்டிச் சொல்லும் பல முதலாலிகள், மன்னிக்கவும் முதலைகள், வேலை எனும் பெயரில் தொழிலாலர்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு உறிஞ்சும் அயோக்கியத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது இப்படம்.


    நடித்த அத்தனை நடிகர்களும் பாத்திரங்களுக்கு கட்சிதமாக பொருந்தியுள்ளனர். கதாநாயகியான அஞ்சலி தன் நடிப்பால் பிரமிக்க வைத்துள்ளார். இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. கதாநாயகன், கதாநாயகனின் உயிர் நண்பன், கதாநாயகியின் தோழிகள் என அத்தனைப் பேரும் தத்தம் பாத்திரங்களை நன்கு செய்துள்ளனர். இத்தனைக்கும் அனைவரும் புதுமுகங்கள் என்றால் நம்ப முடிகிறாதா?

    இயக்குணர் வசந்தபாலன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். இவரது உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் பளிச்சென்று தெரிகிறது. தனக்கே உரிய பாணியில் கதையை யதார்த்தமாக சொல்லியிருக்கிறார். வெயில் படம் தந்த அதே வடு இதிலும் இருக்கும் என எதிர்பார்த்து சென்ற என்னை இவர் ஏமாற்றவில்லை. நித்தமும் தமிழ் படங்களில் காண்பிக்கப்படும் அம்சங்களை அப்புறப்படுத்தி அவர்களது வாழ்க்கையின் மறுப்பக்கத்தை நெஞ்சை வருடும் திரைக்கதையில் காண்பித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் நட்சத்திர இயக்குணர்கள் பட்டியலில் தனக்கென ஒரு இடத்தைச் செதுக்கிவிட்டார் வசந்தபாலன். வசனகர்த்தா ஜெகமோகன் படமுழுவதும் ஜொலிக்கிறார். 'அப்பன் ஆத்தா இல்லாதவன், சோத்துக்கு வழி இல்லாதவனா பாத்து எடு, அவன் தான் ஒழுங்கா வேலை பார்ப்பான்', 'தீட்டு எல்லாம் மனுஷங்களுக்கு தான் கடவுளுக்கு இல்ல' போன்ற வசனங்கள் மிக இயல்பாக படத்தில் உளா வருகின்றன. ஒளிப்பதிவு, கலை போன்ற இதற விசயங்கள் அனைத்தும் நன்றாகவே உள்ளன, குறை ஒன்றும் சொல்வதற்கில்லை.

    இப்படத்தில் குறை ஏதும் இல்லையோ என்பவர்களிடம், எனது பதில், ஆம் உள்ளது. கதாநாயகனும் கதாநாயகியும் பறிமாறிக் கொள்ளும் தத்தம் முந்தைய காதல் கதைகள் அவ்வளவாக சுவாரசியமாக இல்லை. இன்னும் சற்று மெனக்கெட்டிருக்கலாம். முற்பாதியில் பல இடங்களில் விழும் தொய்வுகள் சொல்லும் படியாக மனதில் ஒட்டாத பின்னனி இசையோடு நம் பொருமையைச் சோதிக்கின்றன. பாடல்கள் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சரியாக படமாக்கப் படவில்லை, குறிப்பாக 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை' பாடல். 'எலே' என படமுழுதும் வரும் துணைச் சொற்கள் எரிச்சல் மூட்டுவது என்னமோ உண்மை தான். முழுக்க முழுக்க வட்டார மொழிப் படங்கள் இனி வருவதை தவர்க்க முடியாது. ஆகவே, பழகிக் கொண்டு தான் ஆகவேண்டும். வட்டார வழக்கிற்கே உள்ள அழகை ரசிக்க பழகிக் கொள்ள இதுபோன்ற படங்கள் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.


    எது எப்படியோ, 'கிலைமாக்ஸ்' படத்தை தூக்கி நிருத்துகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. எல்லாவற்றையும் தாண்டி, படம் முடிந்து வெளிவரும்போது மனதில் ஒரு கனம் இருக்கவே செய்கிறது. இனி பணக்காரர்களோ, முதலாளிகளோ அல்லது பொது மக்களோ கூலி வேலை செய்து கஷ்டப்படும் பணியாளர்கள் மீது வைக்கும் பார்வையில் கடுகளவாவது கருணைக் கலந்திருந்தால் அதுவே இப்படத்தின் மிகப் பெறிய வெற்றி.

    பி.கு உண்மையைச் சொல்லப் போனால் இந்த படம் என் மனதில் அவ்வளவாக ஒட்ட வில்லை. இதனைக் காட்டிலும் எனக்கு வெயில் பிடித்துள்ளது. அதற்க்காக அங்காடித்தெரு ஒரு சுமாரான படம் என்று சொன்னால், என்னைக் கடவுள் நிச்சயமாக மன்னிக்க மாட்டார். அனைவரும் பார்க்க வேண்டிய படம். இது போன்ற வித்தியாசமான படப்புகளைத் தமிழ் சினிமாவில் வரவேற்கத் தவறினால் நமக்கு மோட்சமே கிடையாது.

    Tuesday, April 6, 2010

    'ஃபார்முலா' 2-வில் அஜித் - வேறுபட்ட கருத்துக்கள்

    இன்னும் சில தினங்களில் (ஏப்ரல் 16) 'ஃபார்முலா' 2 கார் பந்தயம் துவங்கும் பட்சத்தில், சில நாட்களாக மனதில் உருத்திக் கொண்டிருக்கும் விசயத்தை இந்த பதிவில் பகிர்கிறேன்.


    அஜித் அவர்கள் இந்த முறை இக்கார் பந்தயத்தில் கலந்து கொள்வது பற்றி அனைவரும் அறிந்திருப்பீர். இவரது பங்கேற்பு பற்றி ரசிகர்கள் மத்தியிலும் சரி, பொது மக்களிடமிருந்தும் சரி, கலவையான கருத்துக்கள் உலா வந்த வண்ணமாக உள்ளன. இதுவரை நான் பார்த்த, கேட்ட, அறிந்த அனைத்து கருத்துக்களையும் தொகுத்துள்ளேன். இதனை மூன்று பிரிவினராக வகைப்படுத்தி, அதிலும் ரசிகர் கருத்து, மக்கள் கருத்து என மேலும் பிரித்துள்ளேன்.


    முதல் பிரிவினர் - இந்த பிரிவினர் முழு ஆதரவு தருகின்றனர்

  • ரசிகர்கள்

  • "கார் பந்தயம் என்றால் சும்மாவா... எத்தனை 'ரிஸ்க்க்'. இந்த மனுஷன் நம் நாட்டிற்கு பெருமை தேடித் தர முயன்றுக் கொண்டிருக்கிறார். இது பாராட்டத் தக்கச் செயலே. அஜித் ரசிகனாக இருப்பதில் பெருமைப் படுவது மட்டுமில்லாமல், இவரது வெற்றிக்குக் கடவுளை பிரார்த்திக்கிறோம். இரண்டு வருடத்திற்கு ஒரு படம் வந்தாலும் பரவாயில்லை. யாரைப் பற்றியும் எதனைப் பற்றியும் கவலை வேண்டாம். இப்போதைக்கு கார் பந்தயத்தில் கவனம் செலுத்துங்கள். நீ ஆடு தல... உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம்", என்கின்றனர்.

  • பொது மக்கள்

  • "மிகவும் ஆபத்தான விளையாட்டு. இவரது மன தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் பாராட்டியே ஆக வேண்டும். குறிப்பாக தமிழ் நாட்டைச் சேர்ந்த இவர் வெற்றி பெருவாரானால், நமக்கெல்லாம் அது பெருமைச் சேர்க்கும் சாதனை அல்லவா... இதில் வெற்றியடைவதும் தோல்வியடைவதும் அப்பாற்பட்ட விசயம். தமிழ் நாட்டு பிரதிநிதியாக இவர் கலந்து கொள்கிறாரே, அதுவே போதும். அஜித்திற்கு ஒரு 'சல்யூட்'. ஜெயிப்பார் என நம்புவோம். வாழ்த்துகள். ஆல் தி பெஸ்ட்...", என்று ஊக்கமும் உருதுணையும் அளிக்கின்றனர்.


    இரண்டாம் பிரிவினர் - இவர்கள் சற்று நடுநிலை பார்வையுடையவர்கள்

  • ரசிகர்கள்

  • "இதில் எங்களுக்கு உடன்பாடில்லை. இவரது படங்களுக்கு மட்டுமே நாங்கள் ரசிகர்கள். தல, கடைசி படம் சரியா போகல... இந்த நேரத்தில் ஏன் இந்த திடீர் முடிவு? வருடத்திற்கு இரண்டு படங்கள் பண்ணுங்க... பந்தயத்தில் ஏதாவது ஆகிவிட்டால், நாங்கள் எல்லாம் என்ன பண்ணுவோம்... எங்கே போவோம்... கப்பல் இல்லாத துறைமுகமா, தல அஜித் இல்லாத திரையுலகமா... நீங்கள் இல்லாத திரைத் துறையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.", என்று புலம்புகின்றனர்.

  • பொது மக்கள்

  • "பேசாம இவர் படங்களில் மட்டும் கவனம் செலுத்தலாம். நமக்கு வேண்டியது இவரிடமிருந்து சுவாரிசியமான, ஜனரஞ்சக படங்கள் மட்டுமே. குடும்பம், குழந்தை என்றாகிவிட்டது. இந்த தருனத்தில், இப்பேற்பட்ட 'சீரியஷான" போட்டிகள் எல்லாம் அவசியம் இல்லை. ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் மாதிரி ஆகிவிட்டது இவரது நிலை...", என்கின்றனர்.


    மூன்றாம் பிரிவினர் - வெறும் வாய்ச் செவடால் ஆசாமிகள்

  • ரசிகர்கள்

  • எனக்கு தெரிந்து ரசிகர்கள் இந்த பிரிவில் வரவில்லை. முதலாம் அல்லது இரண்டாம் பிரிவுகளில் மட்டுமே இவர்கள் அடங்குவர்.

  • பொது மக்கள்

  • "ஜெயிச்சிட்டாலும்... எதற்கு இவருக்கு இந்த வீர விளையாட்டு? இப்போ இவரை கலந்துக்கச் சொல்லி யார் அடிச்சா? இவர் ஜெயிப்பது சாத்தியமே இல்லை. கடைசி இரு படங்கள் சரியாக போகவில்லை. அதனால், கார் பந்தயங்களில் கலந்து கொள்கிறார். பணம் நிறைய இருக்கு போலும். அதான் இப்படி செலவு செய்கிறார். சில வருடங்களுக்கு முன்னால் இதையே தான் செய்தார். படங்கள் சரியாக போகவில்லை, கார் பந்தயங்களில் நாட்டம் செலுத்தினார். மீண்டும் நடிக்க வந்தார். இவர் ஜெயித்தால் என்ன தோற்றால் என்ன...", என கேலியும் கிண்டலுமாக பேசுகிறார்கள்.


    கடைசி பிரிவினருக்கு ஒரு அன்பான வேண்டுகோள். ஒரு மனிதன் ஒரு முயற்சியில் இறங்கும்போது, நீங்கள் ஆக்கமும் ஊக்கமும் தராவிட்டாலும், அவர்களது மனம் நோகும் அளவிற்கு முட்டுக்கட்டையாக பேசுவது சரியல்ல. உங்களது அபசகுணமான பேச்சு அவர்களை மன உளச்சளுக்கும் வீழ்ச்சியிலும் ஆளாக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. தட்டிக் கொடுக்காவிட்டாலும் எட்டி மிதிக்காமல் இருப்பதே சிறந்தது.

    குறிப்பாக பிற நடிகர்களின் ரசிகர்கள் இந்த பிரிவில் அடங்குவர். எத்தனை விஜய், விக்ரம் அல்லது சூர்யா ரசிகர்கள் இப்போட்டியில் அஜித்தின் பங்கேற்பிற்கு ஆதரவு தருகின்றனர் என்பது கேள்விக்குறியே. இவர்களது பார்வையில், அஜித் ஒரு நடிகராக பார்க்கப்படுகிறாரே தவிர 'ஃபார்முலா' 2-வில் பங்கேற்க்கும் தமிழ்நாட்டுப் பிரதிநிதியாக அல்ல; இந்திய பிரஜையாக அல்ல. இவர்களது எண்ணம் முழுதாக மாற வேண்டும். அனைவரது ஆசியும் பிரார்த்தனையும் வெற்றி பெற அஜித் அவர்களுக்கு தேவை.


    நான் எந்த பிரிவைச் சேர்ந்தவன் என்ற கேள்வி எழலாம். நிச்சயமாக முதலாம் ரசிகர் பிரிவே. அஜித் ரசிகனாக எனக்கு இது பெருமை படக்கூடிய விசயம். ஒரு தமிழன் இது போன்ற போட்டிகளில் பங்கேற்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தருகின்றது. அஜித் கண்டிப்பாக வெற்றி வாகை சூடுவார் என நம்பிக்கை இருக்கிறது. அதே சமயத்தில், அக்டோபர் முதல் நல்லதோர் கூட்டணியுடன் படம் பண்ணுவார் என்ற எதிர்பார்ப்பும் எனக்கு இருக்கிறது. அவரது பாதுகாப்பிற்கும் வெற்றிக்கும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன். 'குட் லக்' தல...

    இதில் நீங்கள் எந்த பிரிவைச் சேர்ந்தவர்? பின்னூட்டத்தில் போடலாமே...

    பி.கு படங்களுக்கு starajith.com தளத்திற்க்கு நன்றிகள்